search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister Rangaswamy"

    • தீபாவளி பண்டிகைக்காக தலா 500 கிேலா ஸ்வீட், பட்டாசு பாக்ஸ் வழங்கினார்
    • 18 வயது நிரம்பிய அட்டவணை இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு துணிக்கான பணம் இலவச ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை (12-ந் தேதி) கொண் டாடப்படுகிறது.

    இதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தீபாவளி பரிசாக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்க ரைக்கான பணம் ரூ.490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    மேலும், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாத அரிசிக்கான பணம் சிவப்பு குடும்ப அட் டைதாரர்களுக்கு ரூ.1,200, மஞ்சள் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.600 வீதம் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டது.

    18 வயது நிரம்பிய அட்டவணை இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு துணிக்கான பணம் இலவச ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

    இதேபோல், கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.4 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 என தீபாவளி பாண்டி கையையொட்டி பயனா ளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டது. இது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதுவையில் உள்ள 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உட் பட 33 எம்.எல்.ஏ.க்களும் தலா 500 பட்டாசு பாக்ஸ், 500 கிலோ ஸ்வீட் வீதம் முதல் வர் ரங்கசாமி தீபாவளி பரிசு வழங்கினார்.

    இது எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு நாடாளு மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க் களுக்கும் தீபாவளி பரிசு வழங்கியது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்ட போது, சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று ஒற்றை வார்த்தை யில் பதில் அளித்துவிட்டு சென்றார்.

    • இதய அடைப்பை சரிசெய்ய ரத்த குழாயில் ஸ்டன்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

    புதுச்சேரி:

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதய அடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு இதய அடைப்பை சரிசெய்ய ரத்த குழாயில் ஸ்டன்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

    புஸ்சி ஆனந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து திருநீறு பூசி ஆசி வழங்கினார். இதேபோல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    • கிராமத்து பின்னணியில் உருவான இத்திரைப் படத்தில் பிரபல நடிகை தீபா சங்கர்,கோதண்டம் ஆகிேயார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • புதுவை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் மறைந்த வெங்கட்ரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

     புதுச்சேரி:

    சஞ்சீவி்ராஜ் இயக்கத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் புதுவை கிருஷ்ணா முதன் முறையாக இசை அமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் வெள்ளந்தி.

    கிராமத்து பின்னணியில் உருவான இத்திரைப் படத்தில் பிரபல நடிகை தீபா சங்கர்,கோதண்டம் ஆகிேயார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் 3 பாடல்களை எழுதி இசை அமைத்து கிருஷ்ணா பாடி உள்ளார். பாடல்களை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமீபத்தில் வெளியிட்டார்.

    இதில் நிலவை பார்த்தேன் காதல் பாடல் எவ்வித விளம்பரங்கள் இன்றி 21,200 பார்வை யாளர்களை கடந்துள்ளது. கிருஷ்ணா மேலும் 2 புதிய படங்களுக்கு இசை அமைக்கிறார். புதுவையில் இருந்து தமிழ் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகும் கிருஷ்ணாவை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரபல இசை அமைப்பாளர் டி.இமான் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

    கிருஷ்ணாவின் தந்தை புதுவை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் மறைந்த வெங்கட்ரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
    • கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று கடந்த பட்ஜெ ட் கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை ஆயத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரி தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாநிலம். கம்பன் விழா, இலக்கிய விழா என பல்வேறு தமிழ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. புதுவை தமிழ் அறிஞர்களும் வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு விழாக்களுக்கு சென்று வருகின்றனர்.

    தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். தமிழகத்தில் ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு நடத்தி உள்ளனர்.

    புதுவை மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்அறிஞர்கள் வருவார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

    இந்த மாநாட்டிற்கு தேவையான நிதியை புதுவை அரசு ஒதுக்கித்தரும். எனவே அது தொடர்பான கவலை வேண்டாம். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.

    மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முதலில் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாம் செய்து தரலாம்.

    2 அல்லது 3 நாட்கள் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான குழுக்கள் போட்டு வருபவர் களை கவனித்துக்கொள்ளலாம். மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும்.

    அவற்றை எங்கெங்கு நடத்தலாம் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.

    இன்னும் இடங்கள் தேவையென்றால் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    மாநாட்டின்போது சிலம்பம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தலாம். மாநாட்டை வருகிற தை, மாசி மாதங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு பின் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் தேர்தல் முடிந்த பின்னர்தான் நடத்த முடியும். எனவே வெளிநாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களை தொடர்புகொண்டு பேசி அவர்கள் வர வாய்ப்பு உள்ளதா? எப்போது வருவார்கள் என்பதை கேட்டு தெரிவியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சருக்காக சென்னையில் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 20 ரூபாய் நோட்டுக்களை 6 தொழிலாளர்கள் 3 நாட்களாக இந்த மாலையை உருவாக்கினர்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்க சாமிக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் காலை 7 மணி முதல் ஏராளமான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதில் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் வாரிய தலைவரும், மேற்கு மாவட்ட என்ஆ.ர். காங்கிரஸ் தலைவருமான பாலமுருகன் 20 ரூபாய் நோட்டுக்களை கொண்டு மாலையை முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்தாஸ் , தங்கராசு, எழில் அய்யனர், ஆறுமுகம், சபரி இளங்கோ உள்ளிட் டோரும் உடன் சென்று ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    முதல்-அமைச்சருக்காக சென்னையில் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 ரூபாய் நோட்டுக்களை 6 தொழிலாளர்கள் 3 நாட்களாக இந்த மாலையை உருவாக்கினர்.

    மேலும் ஏலக்காய் மற்றும் பாதமை கொண்டு உருவாக்கப்பட்ட மாலை ஒன்றையும் முதல்- அமைச்ச ருக்கு தொண்டர்கள் அணி வித்தனர். 

    • டி.ஜி.பி. கவுரவிப்பு
    • டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் கார்கில் போரின்போது ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் முதநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

    புதுச்சேரி:

    கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தனர்.

    இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடுமையான போர் மூண்டது. கார்கில் பகுதியை மீட்க 'விஜய் நடவடிக்கை' என்கிற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. மலைத் தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.

    போரில் 100-க்கணக்கான இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், போரில் வென்றதை நினைவுகூரும் விதமாகவும் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    கார்கில் வெற்றி தினம் புதுவை கடற்கரை சாலையில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இன்று நடந்தது. நிகழ்வில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட உயரதிகாரிகள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் பங்கேற்று போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்,

    புதுவையில் புதிதாக பொறுப் பேற்றுள்ள டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் கார்கில் போரின்போது ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் முதநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது போரில் காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு மருத்துவ உதவிகளை செய்தார்.

    இதனை பாராட்டி கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை கவுரவித்தார்கள். ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    நமது நாட்டுக்கு பெருமை சேர்த்த போர்ப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கார்கில் வெற்றி தினம் நடந்தது. வெற்றிக்கு வழித் தேடி தந்த டி.ஜி.பி. இங்கு இருப்பது மகிழ்ச்சி. போரில் ஈடுபட்ட வெற்றி தேடி தந்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டும் வாழ்த்துகள்" என்றார்.

    • புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்திய பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

    ஏற்கனவே பாட்னாவில் எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்தது. பெங்களூருவில் 2-வது கூட்டம்  நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம்  டெல்லியில் நடக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., லோக்ஜனசக்தி, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு கட்சியின் தலைவர் நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

    இதேபோல புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை  டெல்லி செல்கிறார். நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் புதுவை திரும்பு கிறார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமியை பொறுத்த வரை விமானத்தில் ஏறும்வரை அவரின் பயணத்தை உறுதிசெய்ய முடியாது. இருப்பினும் முதல்- அமைச்சர் அலு வலக வட்டாரங்கள் அவர் நாளை டெல்லிசெல்ல உள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கென்னடி எம்.எல்.ஏ. அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் அந்த காசோலையை அளித்தார்.
    • பிரமுகர் நோயல், கிளைச் செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் ராகேஷ் மற்றும் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி குட்பட்ட முஸ்லீம் கல்லரை வீதியில் உள்ள வேதவள்ளி அம்மன் கோவில் மற்றும் நேதாஜி நகரில் உள்ள பாலமுருகன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இக்கோவில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி அளிக்குமாறு கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்து அறநிலைத்துறை மூலம் 2 கோவில்களுக்கும் தலா ரூ .1 3/4 லட்சம் நிதிக்கான காசோலையை கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் அந்த காசோலையை அளித்தார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜி, தி.மு.க. பிரமுகர் நோயல், கிளைச் செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் ராகேஷ் மற்றும் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    • தன்னலம் கருதாத இந்த செயலே ஈகை பண்பாக போற்றப்படுகிறது.
    • இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்தின் சிறப்புகளில் ஈகை பண்பும் ஒன்று. அது பிறர் படும் துன்பத்தை கண்டு இரங்கலும், அத்துன்பத்தை போக்க முயல்வதும் ஆகும். தன்னலம் கருதாத இந்த செயலே ஈகை பண்பாக போற்றப்படுகிறது. இத்தகைய ஈகை பண்பால் மக்களின் பழக்க வழக்க பண்பாட்டு சிறப்புகள் பண்டிகைகள் மூலம் வெளிப்பட்டு நிற்பதை காண முடிகிறது.

    ஈகை பண்பையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தும் அதேவேளையில் தன்னலம் கருதா தியாகத்தின் மூலம் பரிபூரண இறையருளை பெற முடியும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் இந்த பக்ரீத் நன்னாளில் இறை தூதர் முகமது நபிகளின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, அவர் உலகிற்கு போதித்த அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற உறுதியேற்போம் என்று கூறி இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சட்டசபை வளாகத்தில் நடந்தது.
    • காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கோர்க்காடை சேர்ந்த பெண் தவமணி(46).இவர் தனது அண்ணன் மாசிலாமணி மற்றும் குடும்பத்தினருடன் புதுவை சட்டசபைக்கு இன்று காலை வந்திருந்தார்.

    முதல்-அமைச்சரை காண வேண்டும் எனக்கூறி சட்டசபை வளாகத்திற்குள் வந்து காத்திருந்தார். அப்போது சுமார் 12.15 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்துக்கு காரில் வந்தார். அவரை வரவேற்க அலுவலக ஊழியர்கள் காத்திருந்தனர்.

    அப்போது காரிலிருந்து ரங்கசாமி இறங்கி நின்று, சட்டசபை படிக்கட்டுகளில் ஏற முயன்றார். இதைக்கண்ட தவமணி ஓடிச்சென்று முதல்-அமைச்சரின் காலை பிடித்துக்கொண்டார்.

    தனது பிரச்சினைக்கு முதலமைச்சர்தான் தீர்வு காண வேண்டும். கோர்க்காட்டில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் பயிர் செய்திருந்தோம். தற்போது வக்கீல் ஒருவர் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்துகொண்டார். நெல்லையும் அறுவடை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கதறியழுதார்.

    அப்போது அருகிலிருந்த தவமணியின் அண்ணன் மாசிலாமணி மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். அப்போது பெட்ரோல் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் காலிலும் ஊற்றியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சரின் பாதுகாவலர்கள், சட்டசபை காவலர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இருந்து அகற்றினர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார். இதையடுத்து சட்டசபை காவலர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெரியகடை போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, பின்னர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து வில்லியனூர் எஸ்பியிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அவர்களை போலீஸ் வாகனத்தில் வில்லியனூருக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுவை சட்டசபையில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வது வாடிக்கை. இருப்பினும் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துவரும் வரை சட்டசபை காவலர்கள் அஜாக்கிரதையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துறைரீதியில் விசாரணை நடத்தவும் சட்டசபை செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவத்தால் புதுவை சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. பெட்ரோல் துளிகள் பட்டதால் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் சட்டையை மாற்றிக்கொண்டார். 

    • தனியார் மருத்துவகல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது.
    • எளிதாக கல்வி கொடுக்கும் மாநிலமாக புதுவை எப்போதும் திகழும்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் காந்தி திடலில் 3 நாட்கள் உயர் கல்வி கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

     மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலாளர்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

    புதுவையில் 12-ம் வகுப்பு படித்தவர்களில் பலருக்கும் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளில் இடம் கிடைத்துவிடும். இதற்காக நகரம், கிராமங்களில் பல கல்லூரிகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

    12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் சுலபமாக இடம் கிடைத்துவிடும். மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர். புதுவை மட்டுமின்றி தமிழ்நாடு, வெளிநாடு களிலும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த விபரங்களை கண்காட்சியில் பெறலாம். மாணவர்கள் விரும்பும் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு தொடங்கப்படும். தனியார் மருத்துவகல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது.

    இதனால் புதுவை மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்க முடியம். எளிதாக கல்வி கொடுக்கும் மாநிலமாக புதுவை எப்போதும் திகழும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவில் சபாநாயகர் செல்வம், துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் மாணிக்கதீபன், துணை ஆணையர் ராகினி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு அதிகாரி மேரிஜோசப்பின்சித்ரா நன்றி கூறினார். நாளை 21-ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.

    • நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
    • சீருடை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சென்டாக் கலந்தாய்வு உரிய நேரத்தில் தொடங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த தற்கு கடந்த ஆண்டு பாடத்திட்டம் குறைவாக இருந்ததும், இந்த ஆண்டு முழுமையான பாடத்திட்டம் இருந்ததும்தான் காரணம். அரசு பள்ளிகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

    அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம்.  தற்போது ஆசிரியர் பற்றாக்குறை அரசு பள்ளி களில் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி யுள்ளோம். அந்த ஆசிரியர்க ளுக்கு சம்பள உயர்வும் அளித்துள்ளோம். கூடுதலாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க உள்ளோம். நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

     அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறோம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை படிப்படியாக கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு ஒன்று முதல் 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அரசு பள்ளி களில் அமல்படுத்தப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ்2 மாநில கல்வி அடிப்படையில் நடைபெறும்.

    அடுத்த கல்வியாண்டில் இவற்றையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக மாற்றப்படும். தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். மாணவர்கள் விரும்பினால் பிரெஞ்சும் படிக்கலாம். கல்வியாண்டு தொடக்கத்திலேயே லேப்டாப் வழங்க உள்ளோம். சீருடை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சென்டாக் கலந்தாய்வு உரிய நேரத்தில் தொடங்கப்படும்.

     கடந்த ஆண்டு போல கலைக்கல்லலூரிகள் தொடங்க காலதாமதம் ஆவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் செயல்பாடுகள் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

    ஏற்கனவே செயல்படு த்தப்பட்ட திட்டங்களையும், நிறுத்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். பொதுப்பணித்துறை மூலம் 135 கி.மீ சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மூலம் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலைநாட்கள் வழங்க உள்ளோம். மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி யுள்ளோம். கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற நிலையில் இருந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கியுள்ளோம். விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்க உள்ளோம்.

    மத்திய அரசு புதுவைக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம். பிரதமரிடம் நேரம் ஒதுக்கித்தர கோரியுள்ளோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×