search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பக்ரீத் வாழ்த்து
    X

    கோப்பு படம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பக்ரீத் வாழ்த்து

    • தன்னலம் கருதாத இந்த செயலே ஈகை பண்பாக போற்றப்படுகிறது.
    • இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்தின் சிறப்புகளில் ஈகை பண்பும் ஒன்று. அது பிறர் படும் துன்பத்தை கண்டு இரங்கலும், அத்துன்பத்தை போக்க முயல்வதும் ஆகும். தன்னலம் கருதாத இந்த செயலே ஈகை பண்பாக போற்றப்படுகிறது. இத்தகைய ஈகை பண்பால் மக்களின் பழக்க வழக்க பண்பாட்டு சிறப்புகள் பண்டிகைகள் மூலம் வெளிப்பட்டு நிற்பதை காண முடிகிறது.

    ஈகை பண்பையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தும் அதேவேளையில் தன்னலம் கருதா தியாகத்தின் மூலம் பரிபூரண இறையருளை பெற முடியும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் இந்த பக்ரீத் நன்னாளில் இறை தூதர் முகமது நபிகளின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, அவர் உலகிற்கு போதித்த அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற உறுதியேற்போம் என்று கூறி இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×