search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 Centre"

    • விழுப்புரம் மாவட்டத்தில் 9 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி.-4 தேர்வு நடந்தது.
    • அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் இன்று (24.07.2022) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், குரூப்-4- தேர்வு நடந்து வருவதை மாவட்ட கலெக்டர் (பொ) பரமேஸ்வரி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. அதன்படி , விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் 207 தேர்வு மையங்களில், 68,244 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்று வருகிறது. மேற்படி தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் வினாத்தாட்களை கொண்டு செல்ல 53 நடமாடும் குழுக்களும் (ஆழடிடைந வுநயஅ), தேர்வினை கண்காணித்திட கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையிலான 27 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறுவதை தவிர்த்திட தேர்வு நடைபெறும் 257 தேர்வு கூடங்கள், மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் வீடியோ கிராபர்கள் மூலம், தேர்வு முடிந்து விடைத்தாட்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வரை அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தரைதளத்தில் தனி அறைகள், தேர்வு மைங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் தடையில்லா மின்சார வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×