என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "800 year old inscription"
- திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் கருவறை சுவற்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
- இடையகோட்டையில் கிடைத்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தபோது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே இைடயகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் ேகாவில் உள்ளது. இக்கோவிலின் கருவறை சுவற்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது என பாண்டியநாடு பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர்களான பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, அரிஸ்டாட்டில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், வரலாற்றின் பல தடயங்கள் புதைந்து கிடக்கின்றன என்ற தகவல்களை இன்றைய கீழடி பொருனை தொல்லியல் ஆய்வுகள் வழியே அறியலாம். இடையகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோவில், இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்த விருப்பாச்சி பாளையம் அமைந்துள்ள நங்காஞ்சி ஆற்றங்கரையில் ஜமீன் அரண்மனைக்கு அருகில் உள்ளது.
சமகால வரலாற்று சிறப்பும், தொன்மையும், பழமையும் நிறைந்த இடமான இடையகோட்டையில் கிடைத்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தபோது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உதகம்பாலன் என்பவர் இக்கோவிலுக்கு நிலைகால், சிற்பங்கள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளார் என்ற தகவல் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
இதில் உள்ள 17 வரிகளில் கடைசி 2 வரிகள் அழிந்த நிலையில் உள்ளன என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்