என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடையகோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு.
ஒட்டன்சத்திரம் அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
- திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் கருவறை சுவற்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
- இடையகோட்டையில் கிடைத்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தபோது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே இைடயகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் ேகாவில் உள்ளது. இக்கோவிலின் கருவறை சுவற்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது என பாண்டியநாடு பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர்களான பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, அரிஸ்டாட்டில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், வரலாற்றின் பல தடயங்கள் புதைந்து கிடக்கின்றன என்ற தகவல்களை இன்றைய கீழடி பொருனை தொல்லியல் ஆய்வுகள் வழியே அறியலாம். இடையகோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோவில், இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்த விருப்பாச்சி பாளையம் அமைந்துள்ள நங்காஞ்சி ஆற்றங்கரையில் ஜமீன் அரண்மனைக்கு அருகில் உள்ளது.
சமகால வரலாற்று சிறப்பும், தொன்மையும், பழமையும் நிறைந்த இடமான இடையகோட்டையில் கிடைத்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தபோது 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உதகம்பாலன் என்பவர் இக்கோவிலுக்கு நிலைகால், சிற்பங்கள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளார் என்ற தகவல் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
இதில் உள்ள 17 வரிகளில் கடைசி 2 வரிகள் அழிந்த நிலையில் உள்ளன என்று தெரிவித்தனர்.