search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "70 bags"

    மீஞ்சூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
    பொன்னேரி:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி கடைகளில் குட்கா, புகையிலை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் இருந்து லாரி, ரெயில்கள் மூலம் அவை தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூரில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மளிகை கடை அருகே இருந்த குடோனில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கைப்பற்றப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 70 மூட்டைகளில் புகையிலை இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    குடோன் உரிமையாளர் பாலாஜி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் சிக்கினால்தான் குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எப்படி சப்ளை செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும்.

    மீஞ்சூர் பகுதிக்கு வட மாநிலங்களில் இருந்து ரெயில், கார் மூலம் புகையிலை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்களை கண்காணிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ×