என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "6 months imprisonment"
- சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகள் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.
- மாவட்டத்தில் 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி பேருந்துகள் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.
தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு )ராஜராஜன் தலைமையில் சேலம் வருவாய் அலுவலர் மாறன், தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 84 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் கூறியதாவது:-மாவட்டத்தில் 108 வாகனங்களில் 84 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் குறைபாடுகள் இருப்பின் அதை திருப்பி அனுப்பி சரி செய்து வரும்படி அறிவுறுத்தபடும்.
பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த கவனமுடன் பேருந்துகளை இயக்க வேண்டும். குழந்தைகளை பேருந்தில் ஏற்றும் போது அவர்கள் முழுமையாக ஏறி இருக்கையில் அமர்ந்து விட்டனரா என்பதை கவனித்தும், அதேபோல் பேருந்தில் இருந்து குழந்தைகள் இறங்கிய பிறகு பெற்றோரிடம் சேர்ந்து விட்டனரா என்பதை உறுதி செய்த பின்னர் பேருந்தை இயக்க வேண்டும்.
பேருந்தில் தீயணைக்கும் கருவி, முதலுதவி பெட்டி கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் 6 மாத காலத்திற்கு அவர்களது லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.481ஐ திருடப்பட்டது.
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே மார்க்கம்பட்டியில் நாகராஜ் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.481ஐ திருடப்பட்டது. இதுகுறித்து இடையகோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழனி அருகே உள்ள நெய்காரப்பட்டியை சேர்ந்த சின்னகாளியப்பன்(48) என்பவர் பணம் திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வழக்குநடந்து வந்தது. இதனைவிசாரித்த நீதிபதி செல்வமகேஸ்வரி பணம் திருடிய சின்னகாளியப்பனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.200-ம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்