search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people treated"

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டம் முழுவதும் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 3 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 658 ஆக உள்ளது.

    இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 919 ஆக உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×