search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 crore"

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த 4 நாட்களில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.40 கோடி சிக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் வந்தாலே கூடவே பணப்பட்டுவாடாவும் வந்து விடும். எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கும் சில அரசியல் கட்சி பிரமுகர்கள், அதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது காலம், காலமாக வழக்கத்தில் உள்ளது. தேர்தல் முடிவையே இது மாற்றி விடுவதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    என்றாலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வது தொடர்ந்த படிதான் உள்ளது. அதோடு தேர்தல் பணப்பட்டு வாடா அதிகரித்தப்படியும் இருக்கிறது.

    கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டு வாடாவுக்காக கொண்ட செல்லப்பட்ட ரூ. 100 கோடி சிக்கியது. 2014-ம் ஆண்டு இந்த தொகை ரூ. 313 கோடியாக உயர்ந்தது,

    இந்த தடவை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பணப் பட்டுவாடா பல நூறு கோடியை எட்டி விடும் நிலை உள்ளது. அந்த பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி குழுக்கள் மூலம் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் பயனாக ரொக்கப் பணம் கட்டு கட்டாக பிடிபட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டது. மறுநாள் (திங்கட்கிழமை) முதல் நாடு முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    கடந்த 4 நாட்களில் நாடு முழுவதும் வாகன சோதனையில் சுமார் ரூ.40 கோடி சிக்கியுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் ரூ.29 கோடி பிடிபட்டது. தமிழ்நாட்டில் ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ரொக்கப் பணம் தவிர தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனைகளில் 13.57 கிலோ தங்கமும் 31.5 கிலோ வெள்ளியும் பிடிபட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 70 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ×