search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 assembly bypoll"

    திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #TNElections2019 #TNAssemblyBypoll
    சென்னை:

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. மே 2-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகல் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

    இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர்கூறுகையில், ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை. 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள்  27 மற்றும் 28-ம் தேதிகளில் பெறப்படாது என தெரிவித்தார். #TNElections2019 #TNAssemblyBypoll
    ×