search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3.25 lakhs of"

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 970-க்கு தேங்காய் பருப்பு மற்றும் எள் ஆகியவை விற்பனையானது.

    மொடக்குறிச்சி, அக்.21-

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 84 மூட்டை கள் கொண்ட 3 ஆயிரத்து 510 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.82.83 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.85.65 காசுகள், சராசரி விலையாக ரூ.84.65 காசுகள் என்ற விலை களிலும் ,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.65.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.60 காசுகள், சராசரி விலையாக ரூ.73.19 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 243-க்கு விற்பனையானது.

    இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நடந்த ஏலத்தில் 283 கிலோ எடையுள்ள எள் விற்பனை யானது. விற்பனையான எள்ளில் கருப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறை ந்த பட்ச விலையாக ரூ.166.29 காசுகள்,

    அதிகபட்ச விலை யாக ரூ.166.29 காசுகள், என்ற விலை களிலும் சிவ ப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.176.99 காசுகள், அதிக பட்ச விலை யாக ரூ.176.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.48 ஆயிரத்து 727-க்கு விற்பனையானது.

    மொத்தம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்க ளில் சேர்த்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்து 970-க்கு தேங்காய் பருப்பு மற்றும் எள் ஆகியவை விற்பனையானது.

    ×