search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 wheeler bicycle"

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரணத்திற்கான காசோலையினையும், 2 நபர்களுக்கு ரூ.18 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 484 மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இடம் பிரச்சனை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, விதவை மகள் திருமண உதவி திட்டம், மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

    மொத்தம் 312 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, 3 சக்கர சைக்கிள் கேட்டு மாற்றுத்திறனாளி வெங்கடாசலம் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலித்த கலெக்டர் அப்போதே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,050/- மதிப்பிலான 3 சக்கர வண்டியினை வழங்க உத்தரவிட்டார்.

    மாவட்ட கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, 3 சக்கர சைக்கிள் கொண்டு வரப்பட்டு அந்த இடத்திலேயே அவருக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×