search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 P erson Arrested"

    • ஆலங்குளம் கருவந்தா கோவில் கொடை விழாவில் வாலிபர் கொலை
    • ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் கைது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் சேதுபதி( வயது 20) இவரது உறவினர் வீடு ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தாவில் உள்ளது.

    கடந்த 3-ந்தேதி கருவந்தாவில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சேதுபதி சென்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சேதுபதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சந்திரசேகர், ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கருவந்தாவை சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    கருவந்தா கோட்டை தெருவை சேர்ந்தவர்கள் சேர்மராஜா(வயது 27), மணிகண்டன்(25), சாமுவேல் சுகுமார்(26). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்களில் சேர்மராஜா ஊர்க்காவல் படை வீரராக உள்ளார். மற்ற 2 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று கோவில் கொடை விழாவின்போது சேதுபதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேரும் சேர்ந்து சேதுபதியை சத்தம் போட்டுள்ளனர்.இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து சேதுபதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×