search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 firefighters funding"

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு தீயணைப்பு நிலைய வீரராக பணியாற்றி வந்த பழனிசாமி, கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலைய டிரைவர் தேவராஜ், அந்தியூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த மதனகோபால், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி வீரர் கணேசன், தென்காசி தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் மாரிமுத்து, ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய வீரர் அர்ச்சுணன், தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர் சேகர், வழுதூர் தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் போஸ், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் கந்தசாமி, கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் ஆபிரகாம்.

    கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பாளர் சசிகுமார், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் சற்குணநாதன் மற்றும் முன்னணி தீயணைப்பாளர் பன்னீர்செல்வம், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் சின்னராஜ், சிவகாசி தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் துரைப்பாண்டி,

    விருதுநகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு டிரைவர் செல்லத்துரை, பேராவூரணி தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் சதீஷ்குமார், கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் மாயாண்டி, ஆற்காடு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் மனோகரன், பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் குப்புசாமி, ஈரோடு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் அல்லிமுத்து,

    மங்களம்பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் ராமசந்திரன், ராஜபாளையம் தீயணைப்பு நிலைய டிரைவர் ஸ்ரீதரன், காட்டுமன்னார் கோயில் தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையில் பணி புரிந்து உயிரிழந்த நிலைய அலுவலர், தீயணைப்பாளர் மற்றும் டிரைவர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #TNCM #Edappadipalaniswami

    ×