search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 worldcup"

    இங்கிலாந்து உலக கோப்பைக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய தடையை விதித்துள்ளது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.

    கவனச்சிதறலே இதற்கு காரணம் என கணித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தடையை வீரர்களுக்கு விதித்துள்ளது.  வீரர்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் தங்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பேற்காது எனவும் கூறியுள்ளது.

    கடந்த போட்டிகளின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வீரர்கள் சிறந்த முறையில் கவனம் சிதறாமல் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×