search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 tonnes of racun rice"

    • டி.என்.பாளையம் அருகே கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் நால்ரோடு பகுதியில் இருந்து பவானிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார் சத்தி-கோபி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது சத்தி சாலையில் இருந்து பவானி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை பங்களாப்புதூர் 3 ரோடு சந்திப்பில் நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வேனில் சுமார் 2 டன் எடையுள்ள ரேசன் அரிசி 50 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ரேசன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் சென்று வேன் டிரைவர் திருப்பூர் மாவட்டம் ரங்கநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சரண் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் டி.என்.பாளையம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் இருந்து வாங்கிக்கொண்டு பவானிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ×