search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 students killed"

    தெலங்கானாவில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் கராத்தே கற்றுக் கொண்டிருந்த 2 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். #SchoolShedCollapse
    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாத்தில் அமைந்துள்ள குகட்பல்லி என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில்,  இன்றும் அந்த பள்ளியின் ஒரு பகுதியில் மாணவர்கள் சிலர் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த அறையின்மேற்கூரை இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 மாணவர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×