search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 shops selling"

    • குட்கா பொருட்களை விற்பனை செய்தது போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    பெருந்துறை-கோவை ரோடு சிப்காட் நுழைவாயில் எதிரில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் வேணுகோபால் மற்றும் மளிகை கடை உரிமையாளர் ஈஸ்வரமூரத்தி ஆகியோர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் 2 கடைகளுக்கு பெருந்துறை தாசில்தார் பூபதி உத்தரவின்படி கிராம நிர்வாக அலுவலர்கள் கவுதமன், பிரேம்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சென்று சீல் வைத்தனர்.

    ×