search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 lady missing"

    • குடும்ப பிரச்சினை மற்றும் கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு சென்ற பெண்களை காணவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டி காளி யம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி(27) என்ற மனைவியும், விஸ்வந்த்(1) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக ஈஸ்வரன் ஊருக்கு வந்திருந்தார்.

    அப்ேபாது அவரது மனைவி முனீஸ்வரி குழந்தையுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டிைய சேர்ந்த வைரமுத்து மனைவி நந்தினி(30). வைரமுத்து மீன்பிடித்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் ஜீவானந்தம்(8). கடன் பிரச்சினை இருந்துவந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் சம்பவத்தன்று நந்தினி தனது குழந்தையுடன் வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையால் குழந்தைகளுடன் இளம்பெண்கள் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் டி.டி.வி தினகரன் நகரை சேர்ந்தவர் ராஜா(31). இவர் கம்பம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி(25), மகள் ஷாக்சிகா(3). சம்பவத்தன்று ராஜா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகளை காணவில்லை.

    அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் வினோத்குமார்(28). இவரது சகோதரி ஜெயபாரதி(32). இவருக்கும் முத்து என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஓவியா என்ற மகளும், கோபிநாத் பாண்டியன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயபாரதி தனது மகன் கோபிநாத் பாண்டியனுடன் அல்லிநகரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றனர்.

    ஆனால் அதன்பின்னர் அவர்கள் வீடுதிரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் பல்வேறு இடங்களில் ேதடிபார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயபாரதி மற்றும் கோபிநாத் பாண்டியனை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே மூதாட்டி மற்றும் இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மனைவி லட்சுமியம்மாள்(80). சம்பவத்தன்று கடைக்கு சென்றுவருவதாக கூறிச்சென்ற லட்சுமியம்மாள் மாயமானார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தாமஸ்காலனியை சேர்ந்தவர் அந்தோணி மகள் பாஸ்டினா(21). இவர் பி.ஏ.பி.எட் படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். சம்பவத்தன்று செல்போனுக்கு ரீஜார்ஜ் செய்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.

    நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாஸ்டினாவை தேடி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருக பாண்டி மனைவி ர ாஜகு மாரி (வயது 58). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று தனது மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற ராஜகுமாரி மாயமானார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சக்திபிரியா (15). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமாகினர்
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ஐஸ்கூல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் விமலா(20). இவர் பி.காம் முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள மருத்து கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது அம்மா செல்லத்தாய் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    தேவதானப்பட்டி 15-வது வார்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் சந்தனேஸ்வரி(19). இவர் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருகில் இருந்த கடைக்கு சென்ற சந்தனேஸ்வரி மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியகுளத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் வடகரை அழகர்சாமி புரத்தை சேர்ந்தவர் சுந்தர் மனைவி மரியபுஷ்பம் (வயது 37). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சம்பவ த்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    வடுகபட்டி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த வர் ஆனந்தி (23). சம்பவ த்தன்று தேனிக்கு செல்வ தாக கூறிச்சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே குடும்ப பிரச்சினையால் 2 பெண்கள் மாயமாகினர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி அழகுராணி (வயது23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அழகுராணி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி போலீஸ் லைன் பின்புறம் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி பிரியா (28). குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து பிரியா மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×