search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16th Anniversary Celebration"

    • பெரியமடத்துபாளையம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெரியமடத்து பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிலில் மஞ்சள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு பக்தி மற்றும் கிராமிய பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் ஆன்மீக வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி சொற்பொழிவும் நடைபெறுகிறது.

    நாளை காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், மதியம் மகா தரிசனம் பூஜையும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெறுகிறது. கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கலியுக வரதராஜ பெருமாளும், தாயார் மகாலட்சுமியும், தும்பிக்கையாழ்வார், இராமானுஜர், ஆஞ்சநேயர், கருடர், துவார பாலகர்கள் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய மடத்து பாளையம் கோவில் தலைவர் ஆறுமுகம் செய்துள்ளார். பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×