search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1500 kg Gutka hoarded in godown seized"

    • குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்ததது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அப்போது அந்தியூர்-பவானி ரோடு, செம்புளிச்சாம்பாளையம் பகுதி, கற்பகம் நகர், 3-வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு குடோனில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பெயர் போலீசார் குடோனுக்குள் சென்று அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அஜித் (23), ஓமலூர் திமிரிகோட்டை ராமன் பட்டியைச் சேர்ந்த மணி (30), சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம்(42), கார்த்தி (20) என தெரிய வந்தது.

    போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.

    இந்த குடோனின் உரிமையாளர் பவானியை சேர்ந்த ரவி என தெரிய வந்தது. ரவி தலைமறைவு ஆகிவிட்டார்.

    வெளியிடங்களில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டு இங்கிருந்து பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் ,மணி, செல்வம், கார்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் குடோன் உரிமையாளர் ரவியை தேடி வருகின்றனர்.

    ரவி சிக்கினால் தான் குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது எங்கு விற்பனை செய்யப்படுகிறது இதில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என முழு விவரம் தெரிய வரும்.

    கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட லோடு வேன் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 1500 கிலோ குட்கா பொருட்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    ×