search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 players will be selected"

    • தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி
    • ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது. மாநில அளவிலான போட்டியில்பங்கேற்க விழுப்புரம் மாவட்ட வாலிபால் வீரர்கள் 18 வயதிற்குற்பட்டவர்களை தேர்வுசெய்யும் பணி விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிக்கு மாவட்ட தலைவர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி வீரர்கள் தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாநில வாலிபால் கழக இணை செயலாளர் மணி முன்னிலையில் நடந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மிகச்சிறந்த முறையில் வாலிபால் விளை யாடும் 12 வீரர்கள் தேர்வு செய்ய போட்டி நடந்தது.நடுவர்கள் காளிதாஸ், ஜோதிப்பிரியா, மணிகண்டன், சுபாஷ், சேதுபதி, பிரேம், பாலாஜி, அரவிந்த் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ×