search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "104.90 feet"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.90 அடியை எட்டியது.
    • பவானி ஆற்றுக்கு இன்று காலை 1,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணை 105 அடியை வேகமாக நெருங்கி வருகிறது .

    அணைக்கு நேற்று 1,800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 3,966 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.90 அடியை எட்டியது.

    105 அடியை அணை நெருங்கி உள்ளதால் பவானி ஆற்றுக்கு இன்று காலை 1,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடி, வாய்க்காலுக்கு 500 கன அடி என மொத்தம் 2,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை யினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் வழியோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பவானி ஆற்றில் அதிக அளவில் உபரி நீர் திறக்கப்ப ட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×