என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "10-year-old student"
- ராஜபாளையத்தில் 2 மணி நேரம் கண் இமைக்காமல் 10 வயது மாணவி சாதனை படைத்தார்.
- விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் சாதனையை படைத்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம். இவரது மகள் அனிஷ்கா (வயது 10). உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 3 மாதங்களாக அய்யப்பன் என்ற பயிற்சியாளர் உதவி யுடன் கண் இமைக்காமல் ஒரு மணி நேரம் 30 வினாடி சாதனைக்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டார் .அதைத்தொடர்ந்து நேற்று இரவு ராஜபாளையம் பெரிய சாவடியில் ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அவர்களி டம் அனுமதி பெற்று அவர் கள் அறிவுறுத்தலின்படி 2 மணி நேரம் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கண்காணிப்பில் விழிகளை இமைக்காமல் இருந்து மாணவி அனிஷ்கா சாதனை படைத்தார்.
ஒரு மணி நேரம் 30 வினாடிகள் சாதனை புரிய வேண்டும் என நினைத்த சிறுமி 2 மணி நேரம் விழிகளை இமைக்காமல் விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் சாதனையை படைத்தார்.
சாதனை படைத்த சிறுமி அனிஷ்காவை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், நண்பர்களும் பாராட்டினர். நகர தந்தை என்று போற்றப்படும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர்மன்ற முன்னாள் தலை வருமான ஏ.ஏ.சுப்பராஜாவின் மகன் (ஷியாம்ராஜா) வழி பேத்தி அனிஷ்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்