search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மணி நேரம் கண் இமைக்காமல் 10 வயது மாணவி சாதனை
    X

    2 மணி நேரம் கண் இமைக்காமல் 10 வயது மாணவி சாதனை

    • ராஜபாளையத்தில் 2 மணி நேரம் கண் இமைக்காமல் 10 வயது மாணவி சாதனை படைத்தார்.
    • விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் சாதனையை படைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம். இவரது மகள் அனிஷ்கா (வயது 10). உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 3 மாதங்களாக அய்யப்பன் என்ற பயிற்சியாளர் உதவி யுடன் கண் இமைக்காமல் ஒரு மணி நேரம் 30 வினாடி சாதனைக்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டார் .அதைத்தொடர்ந்து நேற்று இரவு ராஜபாளையம் பெரிய சாவடியில் ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அவர்களி டம் அனுமதி பெற்று அவர் கள் அறிவுறுத்தலின்படி 2 மணி நேரம் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கண்காணிப்பில் விழிகளை இமைக்காமல் இருந்து மாணவி அனிஷ்கா சாதனை படைத்தார்.

    ஒரு மணி நேரம் 30 வினாடிகள் சாதனை புரிய வேண்டும் என நினைத்த சிறுமி 2 மணி நேரம் விழிகளை இமைக்காமல் விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் சாதனையை படைத்தார்.

    சாதனை படைத்த சிறுமி அனிஷ்காவை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், நண்பர்களும் பாராட்டினர். நகர தந்தை என்று போற்றப்படும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர்மன்ற முன்னாள் தலை வருமான ஏ.ஏ.சுப்பராஜாவின் மகன் (ஷியாம்ராஜா) வழி பேத்தி அனிஷ்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×