என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி தம்பதி"

    • பார்வையற்ற மாற்றுத்தி றனாளி வீட்டை மட்டுமாவது விட்டு விட்டு மற்ற வீடுகளை இடிக்குமாறு அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் கடந்த 40 ஆண்டுகளாக பார்வை யற்ற மாற்றுத் திறனாளி தம்பதியான ஜெயபால், நிம்மி ஆகியோர் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். ஜெயபால் மற்றும் அவரது மனைவி பத்தி, சூடம் ஆகியவற்றை பல்வேறு ஊர்களுக்கு சென்று விற்று பிழைப்பு நடத்தி வரு கின்றனர்.

    இதே பகுதியில் பரமன், பரமசிவம், கருத்தகண்ணன் ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர். இவை தங்களுக்கு சொந்தமான இடம் என்று மொக்கச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். கோர்ட்டு உத்தரவு மொக்கை ச்சாமிக்கு ஆதரவாக வந்தது.

    இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை உதவி யுடன் வீட்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த ப்பட்டது. அதன்படி ஜே.சி.பி. எந்திரத்துடன் அதிகாரி கள் வீட்ைட இடிக்க வந்த னர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காலஅவகாசம் கேட்டனர். ஆனால் அதற்கு மொக்கை ச்சாமி மறுத்து விட்டார். பார்வையற்ற மாற்றுத்தி றனாளி வீட்டை மட்டுமாவது விட்டு விட்டு மற்ற வீடுகளை இடிக்குமாறு அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை.

    தனது வீட்டை இடிக்க வந்தவர்களின் காலில் விழுந்து கதறியும், அவர்கள் கேட்காததால் தங்கள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ஜெயபால், அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகிய 3 பேரும் குடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டிஒருவரும் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முய ன்றார். அவரையும் பொது மக்கள் காப்பாற்றினர். இச்சம்பவத்தால் வீடுகளை இடிக்க வந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 5 வீடுகளையும் இடிக்காமல் செல்ல மாட்டோம் என தெரிவித்து அதனை நிறைவேற்றியே சென்றனர். தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அந்த நிலத்தில் இருந்த மாற்றுத்திறனாளி வீடு உள்பட 4 வீடுகளும் போலீஸ் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது.
    • 2 நாட்களுக்குள் பார்வையற்ற தம்பதிக்கு பட்டா வழங்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து புதிய வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் மொக்கச்சாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் பார்வையற்ற தம்பதியான ஜெயபால்-நிர்மலா உள்பட 4 பேர் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மொக்கச்சாமி தனது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அந்த நிலத்தில் இருந்த 4 வீடுகளும் போலீஸ் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கடந்த வாரம் மயிலாடும்பாறை கிராம கமிட்டியினர் ஆலோசனை கூட்டம் நடத்தி பார்வையற்ற தம்பதிக்கு பொதுமக்கள் சார்பில் மயிலாடும்பாறை யில் புதிய இடம் தேர்வு செய்து அதில் வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இடம் தேர்வு செய்வது தொடர்பாக மயிலாடும்பா றை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மயிலாடும்பாறை கிளை நூலகம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை பார்வையற்ற தம்பதிக்கு வழங்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் புதிய இடத்தை ஆய்வு மேற்கொண்டு வருவாய்த்துறையினர் மூலம் முறையாக அளவீடு செய்தனர். அளவீடு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 2 நாட்களுக்குள் பார்வையற்ற தம்பதிக்கு பட்டா வழங்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து புதிய வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    இந்த ஆய்வின் போது பிச்சை யம்மாள்சடை யாண்டி, சுரேஷ்பாண்டி, பாண்டியம்மாள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×