என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருந்தலைவர் மக்கள் கட்சி"

    • இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன.

    இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.

    இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இந்த நிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது.

    இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அத்துடன் 3-வது கட்டமாக கடந்த 2021-ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.

    இதேபோல் ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் முன்னிலை வகிக்கிறார்கள்.
    • மாவட்ட வர்த்தக அணித்தலைவர் நக்கீரன் வரவேற்று பேசுகிறார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்கஉரையாற்றுகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி கிராம சாவடி தெருவில் உள்ள கே.வி.எம்.திருமண மாளிகையில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடக்க உள்ளது.

    கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட வர்த்தக அணித்தலைவர் நக்கீரன் வரவேற்று பேசுகிறார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்கஉரையாற்றுகிறார்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகர தலைவர் எஸ். செல்வன் நன்றி கூறுகிறார்.

    ×