என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • எட்டு திருவீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
    • 7-ம் நாள் திருவிழாவான 27-ந் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான மாசித் திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் நாள் (22-ந் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி குமர விடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயகர் கோவிலுக்கு வடபுறம் உள்ள ஆண்டியப்பபிள்ளை மண்டபம் வந்து சேர்தல். அம்பாள் மட்டும் உள் திருவீதி 4 வெளி திருவீதி நான்கு ஆக 8 வீதிகளிலும் உலா வந்து மண்டகப்படி சேர்தல் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மேற்படி மண்டபத்தில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும் அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு திருவீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    3-ம் நாள் திருவிழா 23-ந்தேதி (திங்கட்கிழமை )காலை 7 மணிக்கு மேல் சுவாமி மேலகோவிலில் இருந்து பூங்கேடய சப்பரத்திலும், அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும் அம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    4-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும் அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து மேல கோவில் சேர்ந்தல் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 25-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணி அளவில் குடைவரை வாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்கமயில் வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    6-ம் நாள் திருவிழா 26-ந் தேதி (வியாழக்கிழமை )காலை 7 மணிக்கு சுவாமி கோ. ரதத்தில் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து பந்தல் மண்டபம் சேர்தல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.

    7-ம் நாள் திருவிழாவான 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.

    காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பிள்ளையின் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அங்கிருந்து சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 28-ந் தேதி (சனிக்கிழமை)காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான மார்ச்-1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது .

    இரவு 8 மணிக்கு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும் அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி (திங்கள்கிழமை)காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது

    11-ம் திருவிழாவான 3-ந் தேதி ( செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் சுவாமி அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி தெப்பக்குளம் மண்டகப்படி சேர்தல், அங்கு இரவு 10.30 மணிக்கு மேல் அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் வலம் வந்து 14 செங்குந்தர் முதலியார் திருமண மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாரதனைக்கு பின் இரவு 9 மணிக்கு அம்மன் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடந்து விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×