என் மலர்
கோவில்கள்
உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.
மனமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் உறுதியான நம்பிக்கை.
சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார். இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இருந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள்.
உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.
அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள்வாய் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு என்கிறார்கள்.
கோவில் புராணம் :
அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
கி.பி.1788-1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்கிரகமும் அமைத்து வழிபட்டனர். அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

கோவில் உட்புறத் தோற்றம்
மூலஸ்தான சிலையின் சிறப்பு :
இந்தக் கோவிலின் கருவறை ஆரம்பத்தில் மண்ணால் கட்டப்பட்டிருந்தது. பீடம் மட்டுமே இருந்த இடத்தில் பிற்காலத்தில் அம்மனின் மூலவர் சிலை அமைக்கப்பட்டது. அந்த மூல உருவ சிலையை தனியாக எடுக்க இயலாது. அந்த சிலை தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது. இந்த சிலை சுமார் 300 ஆண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். ஆவுடையார் பீடத்தில் வலது காலை தொங்க விட்டபடியும், இடது காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் அம்மன் வீற்றிருக்கிறாள். காளி அம்மன் போல் கோரைப்பற்கள், இந்த அம்மனுக்கும் உண்டு. அதனால் இந்த அம்மன் காளி அம்சம் பொருந்திய மாரியம்மன் என்பது சிறப்பு.
அம்மனுக்கு எட்டு கைகள் உள்ளன. வலது பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதமும், இடது பக்கம் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவைகளும் காணப்படுகின்றன. இந்த சிலையின் பின் பக்கத்தில் ஒரு துவாரம் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மன் சிரசில் இருந்து முகத்தில் படிவது சிறப்பு அம்சமாகும்.
இந்த கோவிலின் கொடி மரம், மூலஸ்தான அம்மன், கோபுர கலசம் போன்றவை, முன்புறம் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் படி அமையப்பெற்றது கூடுதல் சிறப்பு. பெண் தெய்வமான மாரியம்மனுக்கு தசாவதாரம் எடுப்பதும், அம்மன் தெப்ப உற்சவத்தின் போது சயன கோலத்தில் காட்சியளிப்பதும் இந்தக் கோவிலில் மட்டும் தான்.
தங்கத் தேர் :
கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தங்கரதம் அமைக்க ராமநாதபுரம் தேவஸ்தானத்தில் இருந்தும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்தும் வரி இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், திண்டுக்கல் விஸ்வகர்ம சங்க நிர்வாகிகள் முன்னிலையில் தங்கத்தகடுகள் ஒட்டி தங்கத் தேருக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
தங்க ரதத்தில் பிரம்முகி சிலை, இரண்டு குதிரைகள், நான்கு சேடி பெண்கள், ஆறு கந்தர்வர்கள், கோடி பூதம் ஆறு, சூரிய காந்தி பூக்கள் ஆறு, உத்திரையாழி, ஆறு போதியால், கலசத்துடன் கூடிய அலங்கார குடை மற்றும் விநாயகர், முருகன், மாரியம்மன், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகிய சாமி விக்கிரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12½ அடி உயரத்தில் மிக அழகாக தங்கரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ரதம் 12.3.2011 அன்று கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ஆலய கருவறையில் கோட்டை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். கருவறையை ஒட்டி முன்புறத்தின் தெற்கு பக்கம் விநாயகர் சன்னிதியும், வடக்கு பக்கம் மதுரை வீரன் சுவாமி சன்னிதியும் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. பின்பக்கத்தின் தென்புறம் முனீஸ்வரசாமி சன்னிதியும், வடபுறம் கருப்பணசாமி சன்னிதியும் இருக்கிறது. இதுதவிர கோவிலின் நுழைவு வாசல், முன் மற்றும் அலங்கார மண்டபம், அர்த்த மண்டபம், கோவில் வளாகத்தில் உள்ள சிங்க வாகனம், கொலு மண்டபம், கலையரங்கம், திருமண மண்டபம், உணவு கூடம், தங்கத்தேர் ஓடு பாதைகள் அமையப்பெற்றுள்ளன.
குழந்தைகளுக்கு அம்மை கண்டுவிட்டால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தீர்த்தம் வாங்கி சென்று குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அம்மை விலகியதும் மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்தக் கோவிலுக்கு இந்து மதத்தினர் மட்டுமல்லாது, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பாகுபாடின்றி வருகை தருவதை மாசித்திருவிழாவில் கண்கூடாக காணலாம். அதன்படி மும்மதத்தின் ஒற்றுமைக்கு இந்தக் கோவில் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
மாசித் திருவிழா :
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கோவிலின் மாசித்திருவிழா 10 நாட்களும், 1956-ம் ஆண்டிலிருந்து 17 நாட்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாசித்திருவிழாவில் சாமி சாட்டுதலுக்கு 3 நாட்கள் முன்பு, அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரமும், அடுத்தநாள் பூச்சொரிதல் விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மலர்களை கொண்டு அம்மனுக்கு புஷ்ப அபிஷேகமும் நடத்தப்படுவது சிறப்பு. இதுதவிர சாட்டுதல், கொடியேற்றம், நாகல்நகர் புறப்பாடு என இன்னும் பிற உற்சவ நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 14-3-2017 வரை நடக்கிறது. அம்மனிடம் வேண்டி வரங்கள் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழா காலங்களில் அங்கப்பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் உள்பட எண்ணற்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.
மனமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் உறுதியான நம்பிக்கை.
சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார். இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இருந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள்.
உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.
அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள்வாய் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு என்கிறார்கள்.
கோவில் புராணம் :
அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
கி.பி.1788-1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்கிரகமும் அமைத்து வழிபட்டனர். அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

கோவில் உட்புறத் தோற்றம்
மூலஸ்தான சிலையின் சிறப்பு :
இந்தக் கோவிலின் கருவறை ஆரம்பத்தில் மண்ணால் கட்டப்பட்டிருந்தது. பீடம் மட்டுமே இருந்த இடத்தில் பிற்காலத்தில் அம்மனின் மூலவர் சிலை அமைக்கப்பட்டது. அந்த மூல உருவ சிலையை தனியாக எடுக்க இயலாது. அந்த சிலை தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது. இந்த சிலை சுமார் 300 ஆண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். ஆவுடையார் பீடத்தில் வலது காலை தொங்க விட்டபடியும், இடது காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் அம்மன் வீற்றிருக்கிறாள். காளி அம்மன் போல் கோரைப்பற்கள், இந்த அம்மனுக்கும் உண்டு. அதனால் இந்த அம்மன் காளி அம்சம் பொருந்திய மாரியம்மன் என்பது சிறப்பு.
அம்மனுக்கு எட்டு கைகள் உள்ளன. வலது பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதமும், இடது பக்கம் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவைகளும் காணப்படுகின்றன. இந்த சிலையின் பின் பக்கத்தில் ஒரு துவாரம் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மன் சிரசில் இருந்து முகத்தில் படிவது சிறப்பு அம்சமாகும்.
இந்த கோவிலின் கொடி மரம், மூலஸ்தான அம்மன், கோபுர கலசம் போன்றவை, முன்புறம் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் படி அமையப்பெற்றது கூடுதல் சிறப்பு. பெண் தெய்வமான மாரியம்மனுக்கு தசாவதாரம் எடுப்பதும், அம்மன் தெப்ப உற்சவத்தின் போது சயன கோலத்தில் காட்சியளிப்பதும் இந்தக் கோவிலில் மட்டும் தான்.
தங்கத் தேர் :
கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தங்கரதம் அமைக்க ராமநாதபுரம் தேவஸ்தானத்தில் இருந்தும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்தும் வரி இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், திண்டுக்கல் விஸ்வகர்ம சங்க நிர்வாகிகள் முன்னிலையில் தங்கத்தகடுகள் ஒட்டி தங்கத் தேருக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
தங்க ரதத்தில் பிரம்முகி சிலை, இரண்டு குதிரைகள், நான்கு சேடி பெண்கள், ஆறு கந்தர்வர்கள், கோடி பூதம் ஆறு, சூரிய காந்தி பூக்கள் ஆறு, உத்திரையாழி, ஆறு போதியால், கலசத்துடன் கூடிய அலங்கார குடை மற்றும் விநாயகர், முருகன், மாரியம்மன், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகிய சாமி விக்கிரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12½ அடி உயரத்தில் மிக அழகாக தங்கரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ரதம் 12.3.2011 அன்று கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ஆலய கருவறையில் கோட்டை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். கருவறையை ஒட்டி முன்புறத்தின் தெற்கு பக்கம் விநாயகர் சன்னிதியும், வடக்கு பக்கம் மதுரை வீரன் சுவாமி சன்னிதியும் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. பின்பக்கத்தின் தென்புறம் முனீஸ்வரசாமி சன்னிதியும், வடபுறம் கருப்பணசாமி சன்னிதியும் இருக்கிறது. இதுதவிர கோவிலின் நுழைவு வாசல், முன் மற்றும் அலங்கார மண்டபம், அர்த்த மண்டபம், கோவில் வளாகத்தில் உள்ள சிங்க வாகனம், கொலு மண்டபம், கலையரங்கம், திருமண மண்டபம், உணவு கூடம், தங்கத்தேர் ஓடு பாதைகள் அமையப்பெற்றுள்ளன.
குழந்தைகளுக்கு அம்மை கண்டுவிட்டால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தீர்த்தம் வாங்கி சென்று குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அம்மை விலகியதும் மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்தக் கோவிலுக்கு இந்து மதத்தினர் மட்டுமல்லாது, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பாகுபாடின்றி வருகை தருவதை மாசித்திருவிழாவில் கண்கூடாக காணலாம். அதன்படி மும்மதத்தின் ஒற்றுமைக்கு இந்தக் கோவில் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
மாசித் திருவிழா :
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கோவிலின் மாசித்திருவிழா 10 நாட்களும், 1956-ம் ஆண்டிலிருந்து 17 நாட்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாசித்திருவிழாவில் சாமி சாட்டுதலுக்கு 3 நாட்கள் முன்பு, அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரமும், அடுத்தநாள் பூச்சொரிதல் விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மலர்களை கொண்டு அம்மனுக்கு புஷ்ப அபிஷேகமும் நடத்தப்படுவது சிறப்பு. இதுதவிர சாட்டுதல், கொடியேற்றம், நாகல்நகர் புறப்பாடு என இன்னும் பிற உற்சவ நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 14-3-2017 வரை நடக்கிறது. அம்மனிடம் வேண்டி வரங்கள் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழா காலங்களில் அங்கப்பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் உள்பட எண்ணற்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.
மனமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் உறுதியான நம்பிக்கை.
நடனமாடி நடராசர் இத்தலத்தில் உறைந்ததால் இத்தலம் நடனபுரியானது. அத்துடன் இத்தலம் நடராச பெருமானுக்கு உகந்த தலமாகி திருச்சிற்றம்பலம் எனப் பெயர் பெற்றது.
பரம் பொருளான சிவபெருமான் மக்களுக்கு திருவருள் செய்யும் கருணையோடு சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனியோடு எழுந்தருளி அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
நடராசரின் தரிசனம் :
கவுசிக வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ ஞானசிந்து என்ற மகரிஷி இறைவன் மேல் அளவில்லா பக்தி கொண்டிருந்தார். அவருக்கு காலை தனுஷ்கோடி ஸ்நானம், மதியம் கங்கா ஸ்நானம், போஜனம், இரவு தில்லை நடராசரின் தரிசனம். இதுதான் அவருடைய தினசரி நியமம். இது தவறினால் தீ வளர்த்து உயிரை மாய்த்துக்கொள்வதாக விரதம் மேற்கொண்டிருந்தார்.
ஒரு நாள் திருச்சிற்றம்பலம் வந்தார் மகரிஷி. கடுமையான பேய் மழை பொழியவே, அவரால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை. சிவபெருமானை வணங்கிவிட்டு இரவு இத்தலத்திலேயே தங்கிவிட்டார். பொழுது விடிந்தது. மகரிஷி மன வருத்தத்துடன் இறைவனை வேண்டினார். தன் விரதத்தை நிறைவேற்ற முடியவில்லையே என மன வேதனையோடு இறைவன் முன் கண்ணீர் மல்க நின்றார். தான் கொண்ட விரதப்படி தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அருகே கிடந்த மரக்கட்டைகளைக் குவித்தார். தீயை மூட்டினார். தீ மளமளவென எரியத் தொடங்கியது. கண்களை மூடி நடராசரை ஒருமுறை தியானித்தார். பின் எதிரே எரிந்து கொண்டிருந்த தீயில் பாயத் தயாரானார். தீயில் பாயத் தொடங்கிய போது நடராச பெருமான் அவர் முன் தரிசனம் தந்து அவரை தடுத்தாட்கொண்டார். தவிர அவர் என்றும் வழிபட வசதியாக இத்தலத்திலேயே தங்கி அருள்பாலிக்கத் தொடங்கினார்.
நடனமாடி நடராசர் இத்தலத்தில் உறைந்ததால் இத்தலம் நடனபுரியானது. அத்துடன் இத்தலம் நடராச பெருமானுக்கு உகந்த தலமாகி திருச்சிற்றம்பலம் எனப் பெயர் பெற்றது.
இறைவன்- இறைவி :
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் நடனபுரீஸ்வரர். இறைவியின் பெயர் சவுந்திர நாயகி. இத்தலம் கொள்ளிடம் என அழைக்கப்படும் வடகாவிரிக்கும் சுப்பிரமணிய நதி எனும் மண்ணியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இத்தலத்தின் பெருமான் நடனபுரீசுவரர் மற்றும் அம்பாள் சவுந்திர நாயகி ஆகியோரது திருக்கோவில்கள் 21.8.1978-ல் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரின் செப்புத் திருமேனிகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இத்தலத்தில் மேற்கில் வளர்தொட்டி எனும் வைப்புத்தலமும் திருப்பந்தணை நல்லூர் என்று பெயர் பெற்று தற்போது பந்தணைநல்லூர் என அழைக்கப்படுகிறது. பசுபதீசுவரர் ஆலயம் உள்ள தலமும் தெற்கில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருத்துருத்தி தலங்களும் வடக்கில் ஓமாம் புலியூர் என்ற தலமும் கிழக்கில் மந்தாரம் எனும் வைப்புத்தலமும் உள்ளன. தவிர கிழக்கில் சற்றுத்தொலைவில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலும் நந்தனாருக்காக நந்தி விலகிய திருப்புன்கூர் போன்ற சிறப்பு மிக்க தலங்களும் உள்ளன.
ஆதியில் அடர்ந்த வில்வக்காடாக இருந்தது இத்தலம். இறைவன் வில்வ மரத்தடியில் அமர்ந்து காட்சி கொடுத்ததால் இத்தலம் வில்வாரண்யம் என்றும் இறைவன் வில்வனேசுவரர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. எதிரே திருக் குளம் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் நந்தி தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்து பலிபீடம். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் இறைவி சவுந்திரநாயகி தென்முகம் நோக்கி அமைதியே உருவாக சாந்தம் தவழும் முகத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். நுழைவு வாசலின் இடதுபுறம் கணபதியும், வலதுபுறம் விநாயகர், வள்ளி, ஞானமுத்து குமாரசாமி, தெய்வானை, சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. சிறப்பு மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர் சிவகாமி சன்னிதி உள்ளது. கருவறையை நோக்கி நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து உள்ள அர்த்தமண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள். அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. உள்ளே இறைவன் அருள்மிகு நடனபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

பரிவார தெய்வங்கள் :
திருச்சுற்றில் மேற்கில் நிருதி விநாயகர், நால்வர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, ஸ்ரீகாசி விசுவநாதர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வமரம். ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளத்திற்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். இந்த ஆலயத்தின் தீர்த்தமும் இதுவே. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு 13.6.2008 அன்று குடமுழுக்குத் திருவிழா நடைபெற்றுள்ளது.
சுமார் 500 ஆண்டுகளைக் கடந்த மிகவும் பழமையான இந்த ஆலயம் தற்போது கண்களைக் கவரும் விதமாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
நமக்கு துன்பம் வரும்போது இறைவனே நம்மைத் தேடி வந்து அருள்பாலிப்பார் என்ற உண்மையை பக்தர்களுக்கு உணர்த்திய தலம் இது என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுவது உண்மையே.
பந்தநல்லூர்-சீர்காழி பேருந்து தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் என்ற இந்த தலம். மயிலாடுதுறை, சிதம்பரம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் முதலிய ஊர்களில் இருந்து இத்தலம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்தும், மணல்மேட்டிலிருந்து மினிபஸ் வசதியும் உள்ளன.
நோய் நிவர்த்தி தலம் :
சந்திரன் ஷயரோக வியாதியால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து நிவர்த்தி பெற விரும்பி அருகே உள்ள வளர்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரரை வழிபட விரும்பினார். எனவே தான் கையோடு கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை திருச்சிற்றம்பலத்தில் இருந்த வில்வ மரத்தடியில் வைத்துவிட்டு வளர்தொட்டி சென்றார். பிரம்மபுரீசுவரரை வணங்கிவிட்டு திரும்பி வந்து சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. ‘யாம் இத்தலத்தில் இருக்க விருப்பமுடையோம்’ என அசரீரி ஒலிக்க சந்திரன் சிவலிங்கத்தை அங்கேயே விட்டுச்சென்றுவிட்டார். எனவே இங்குள்ள பெருமானுக்கு சந்திரேசுவரர் எனவும் இத்தலத்திற்கு சந்திரஜோதிபுரம் சந்திரேசம் என்ற பெயர்களும் உண்டு.
பராசர மகரிஷி யமுனா நதிக்கரையில் மச்சகந்தியைக் கண்டு மோகித்தார். அதன் காரணமாக சித்த பிரமை அடைந்தார். பின்னர் நாரதர் வழிகாட்டியபடி இத்தலம் வந்து குணமடைந்தார். இங்குள்ள சந்திரபுஷ்கரணியில் மூழ்கி சில காலம் இங்கேயே தங்கி இறைவனை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றார். எனவே இங்குள்ள இறைவன் பராசரேசுவரர் என்றும் இத்தலம் பராசரேசம் என்ற பெயரிலும் அழைக்கப் படுவதுண்டு.
நடராசரின் தரிசனம் :
கவுசிக வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ ஞானசிந்து என்ற மகரிஷி இறைவன் மேல் அளவில்லா பக்தி கொண்டிருந்தார். அவருக்கு காலை தனுஷ்கோடி ஸ்நானம், மதியம் கங்கா ஸ்நானம், போஜனம், இரவு தில்லை நடராசரின் தரிசனம். இதுதான் அவருடைய தினசரி நியமம். இது தவறினால் தீ வளர்த்து உயிரை மாய்த்துக்கொள்வதாக விரதம் மேற்கொண்டிருந்தார்.
ஒரு நாள் திருச்சிற்றம்பலம் வந்தார் மகரிஷி. கடுமையான பேய் மழை பொழியவே, அவரால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை. சிவபெருமானை வணங்கிவிட்டு இரவு இத்தலத்திலேயே தங்கிவிட்டார். பொழுது விடிந்தது. மகரிஷி மன வருத்தத்துடன் இறைவனை வேண்டினார். தன் விரதத்தை நிறைவேற்ற முடியவில்லையே என மன வேதனையோடு இறைவன் முன் கண்ணீர் மல்க நின்றார். தான் கொண்ட விரதப்படி தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அருகே கிடந்த மரக்கட்டைகளைக் குவித்தார். தீயை மூட்டினார். தீ மளமளவென எரியத் தொடங்கியது. கண்களை மூடி நடராசரை ஒருமுறை தியானித்தார். பின் எதிரே எரிந்து கொண்டிருந்த தீயில் பாயத் தயாரானார். தீயில் பாயத் தொடங்கிய போது நடராச பெருமான் அவர் முன் தரிசனம் தந்து அவரை தடுத்தாட்கொண்டார். தவிர அவர் என்றும் வழிபட வசதியாக இத்தலத்திலேயே தங்கி அருள்பாலிக்கத் தொடங்கினார்.
நடனமாடி நடராசர் இத்தலத்தில் உறைந்ததால் இத்தலம் நடனபுரியானது. அத்துடன் இத்தலம் நடராச பெருமானுக்கு உகந்த தலமாகி திருச்சிற்றம்பலம் எனப் பெயர் பெற்றது.
இறைவன்- இறைவி :
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் நடனபுரீஸ்வரர். இறைவியின் பெயர் சவுந்திர நாயகி. இத்தலம் கொள்ளிடம் என அழைக்கப்படும் வடகாவிரிக்கும் சுப்பிரமணிய நதி எனும் மண்ணியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இத்தலத்தின் பெருமான் நடனபுரீசுவரர் மற்றும் அம்பாள் சவுந்திர நாயகி ஆகியோரது திருக்கோவில்கள் 21.8.1978-ல் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரின் செப்புத் திருமேனிகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இத்தலத்தில் மேற்கில் வளர்தொட்டி எனும் வைப்புத்தலமும் திருப்பந்தணை நல்லூர் என்று பெயர் பெற்று தற்போது பந்தணைநல்லூர் என அழைக்கப்படுகிறது. பசுபதீசுவரர் ஆலயம் உள்ள தலமும் தெற்கில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருத்துருத்தி தலங்களும் வடக்கில் ஓமாம் புலியூர் என்ற தலமும் கிழக்கில் மந்தாரம் எனும் வைப்புத்தலமும் உள்ளன. தவிர கிழக்கில் சற்றுத்தொலைவில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலும் நந்தனாருக்காக நந்தி விலகிய திருப்புன்கூர் போன்ற சிறப்பு மிக்க தலங்களும் உள்ளன.
ஆதியில் அடர்ந்த வில்வக்காடாக இருந்தது இத்தலம். இறைவன் வில்வ மரத்தடியில் அமர்ந்து காட்சி கொடுத்ததால் இத்தலம் வில்வாரண்யம் என்றும் இறைவன் வில்வனேசுவரர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. எதிரே திருக் குளம் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் நந்தி தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்து பலிபீடம். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் இறைவி சவுந்திரநாயகி தென்முகம் நோக்கி அமைதியே உருவாக சாந்தம் தவழும் முகத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். நுழைவு வாசலின் இடதுபுறம் கணபதியும், வலதுபுறம் விநாயகர், வள்ளி, ஞானமுத்து குமாரசாமி, தெய்வானை, சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. சிறப்பு மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர் சிவகாமி சன்னிதி உள்ளது. கருவறையை நோக்கி நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து உள்ள அர்த்தமண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள். அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. உள்ளே இறைவன் அருள்மிகு நடனபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

பரிவார தெய்வங்கள் :
திருச்சுற்றில் மேற்கில் நிருதி விநாயகர், நால்வர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, ஸ்ரீகாசி விசுவநாதர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வமரம். ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளத்திற்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். இந்த ஆலயத்தின் தீர்த்தமும் இதுவே. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு 13.6.2008 அன்று குடமுழுக்குத் திருவிழா நடைபெற்றுள்ளது.
சுமார் 500 ஆண்டுகளைக் கடந்த மிகவும் பழமையான இந்த ஆலயம் தற்போது கண்களைக் கவரும் விதமாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
நமக்கு துன்பம் வரும்போது இறைவனே நம்மைத் தேடி வந்து அருள்பாலிப்பார் என்ற உண்மையை பக்தர்களுக்கு உணர்த்திய தலம் இது என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுவது உண்மையே.
பந்தநல்லூர்-சீர்காழி பேருந்து தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் என்ற இந்த தலம். மயிலாடுதுறை, சிதம்பரம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் முதலிய ஊர்களில் இருந்து இத்தலம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்தும், மணல்மேட்டிலிருந்து மினிபஸ் வசதியும் உள்ளன.
நோய் நிவர்த்தி தலம் :
சந்திரன் ஷயரோக வியாதியால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து நிவர்த்தி பெற விரும்பி அருகே உள்ள வளர்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரரை வழிபட விரும்பினார். எனவே தான் கையோடு கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை திருச்சிற்றம்பலத்தில் இருந்த வில்வ மரத்தடியில் வைத்துவிட்டு வளர்தொட்டி சென்றார். பிரம்மபுரீசுவரரை வணங்கிவிட்டு திரும்பி வந்து சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. ‘யாம் இத்தலத்தில் இருக்க விருப்பமுடையோம்’ என அசரீரி ஒலிக்க சந்திரன் சிவலிங்கத்தை அங்கேயே விட்டுச்சென்றுவிட்டார். எனவே இங்குள்ள பெருமானுக்கு சந்திரேசுவரர் எனவும் இத்தலத்திற்கு சந்திரஜோதிபுரம் சந்திரேசம் என்ற பெயர்களும் உண்டு.
பராசர மகரிஷி யமுனா நதிக்கரையில் மச்சகந்தியைக் கண்டு மோகித்தார். அதன் காரணமாக சித்த பிரமை அடைந்தார். பின்னர் நாரதர் வழிகாட்டியபடி இத்தலம் வந்து குணமடைந்தார். இங்குள்ள சந்திரபுஷ்கரணியில் மூழ்கி சில காலம் இங்கேயே தங்கி இறைவனை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றார். எனவே இங்குள்ள இறைவன் பராசரேசுவரர் என்றும் இத்தலம் பராசரேசம் என்ற பெயரிலும் அழைக்கப் படுவதுண்டு.
சிவனின் வீரம் வெளிப்பட்டதால் வீரவநல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்தை பூமித்தாயே உருவாக்கி வழிபட்டதால், இத்தல இறைவன் பூமிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
பூவுலகில் வாழும் உயிர்களை எடுத்துச் செல்லும் எமதர்மனை ஒரு முறை சிவபெருமான் சம்ஹாரம் செய்து விட்டார். இதனால் உலகில் உயிர்கள் அழிவில்லாமல் பூமி பாரம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பூமித் தாயான பூமகள், எமதர்மனை உயிர்ப்பிக்க வழிபாடு செய்தாள். இந்த பெருமைக்குரிய ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
நீண்ட காலமாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த மிருகண்டு முனிவர்- மருத்துவவதி தம்பதியர், சிவபெருமானை வேண்டினர். அதன் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டனர். அவன் பதினாறு வயதில் இறந்து போய்விடுவான் என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர். சிறு வயதிலேயே தங்கள் பிள்ளை உயிரிழந்து விடுவான் என்பதை நினைத்துக் கவலையடைந்த பெற்றோருக்கு, தன்னைச் சிவபெருமான் எப்படியும் காத்தருள்வார் என்று மார்க்கண்டேயன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிறுவனான மார்க்கண்டேயன் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதுடன், சிவபெருமானிடம் முழுமையாகச் சரண்டைந்திருந்தான். அவனுக்குப் பதினாறு வயதான போது, அவனுடைய உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர் கள், சிவபெருமானிடம் ஒன்றியிருக்கும் அவனைத் தனியாகப் பிரித்து, அவன் உயிரைக் கொண்டு செல்ல முடியாது என்று நினைத்துத் திரும்பினர்.
எமதர்மன், மார்க்கண்டேயனின் உயிரைத் தானே எடுத்து வருவதாகச் சொல்லி வந்தான். இறைவனிடம் ஒன்றியிருந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காகப் பாசக்கயிற்றை வீசினான். அந்தக் கயிறு சிவபெருமானையும் சேர்த்துப் பற்றியது. அதனால் கோப மடைந்த இறைவன், அவனைத் தன் காலால் எட்டி உதைத்தார். இறைவன் தாக்குதலால் நிலை குலைந்த அவன் அங்கிருந்து தென்பகுதியில் வந்து விழுந்தான். செயலற்றுப் போன அவன், ஒரு சாதாரணக் கொடியாக மாறிப் போனான்.
இதனால் எமன் தனது பணியைச் செய்ய முடியாமல் போனது. பூமியில் இருப்பவர்களுக்கு இறப்பு இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து, பூமியின் எடையும் அதிகமாகத் தொடங்கியது. பூமியின் அதிக எடையைத் தாங்க முடியாத பூமித்தாய், எமதர்மன் செயலற்றுக் கிடந்த பகுதிக்கு வந்து, அங்கு ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினாள்.
அவளின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த இறைவன், அவள் வேண்டு கோளை ஏற்று, எமதர்மனை உயிர்ப்பித்துத் தந்தார். பின்னர் அவர் எமனிடம், ‘இனி சிவகணங்கள் அழைக்கும் உயிர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது. சிவபக்தர்களுக்கு மரண பயம் கொடுத்துத் துன்புறுத்தக் கூடாது’ என்றும் அறிவுரை வழங்கினார். எமனும் அதை ஏற்றுக் கொண்டார்.
சிவபெருமான் எமதர்மனுக்கு உயிர் தந்ததால் இவ்வூருக்குத் ‘தருமநல்லூர்’ என்றும், சிவனின் வீரம் வெளிப்பட்டதால் வீரவ நல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்தை பூமித்தாயே உருவாக்கி வழிபட்டதால், இத்தல இறைவன் பூமிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் கட்டுமானம் :
பாண்டிய மன்னன் அதிவீரவழுதி மாறன் என்பவனை வகுளத்தாமன் என்பவன் போரில் தோற்கடித்தான். தோல்வியுற்ற மன்னன், தனது நாடு, நகரம், மக்கள் என அனைத்தையும் இழந்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனுக்குப் பூமித்தாய் வழிபட்ட சிவலிங்கம் கண்ணில் பட்டது. அவன், அந்த லிங்கத்தின் முன்பாக அமர்ந்து, தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற உதவும்படி வேண்டி வழிபட்டான்.
அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய இறைவன், ‘மன்னா! உன்னிடம் மீத மிருக்கும் சிறு படையைக் கொண்டு மீண்டும் அவனை எதிர்த்துப் போரிடு. அந்தப் போரில் உனக்கு வெற்றி கிடைக்கும். அதன் பின்பு, இங்கு வந்து எனக்குக் கோவில் எழுப்பி வழிபாடுகளைச் செய்க’ என்று அசரீரியாகச் சொன்னார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் மீண்டும் தனது சிறு படையுடன் அவனை எதிர்த்துப் போரிட்டான். இறைவனுடைய திருவருளால் அவனுடைய சிறு படை, எதிர்ப்படையினருக்கு அதிகமானவர்களுடன் பெரும் படையாகத் தோற்றமளித்தது. அந்தப் பெரும்படையை எதிர்த்துப் போட்டியிடப் பயந்த எதிரி, தனது படையுடன் பின்வாங்கி ஓடினான்.
தன் நாட்டைத் திரும்பப் பெற்ற மன்னன் அதிவீரவழுதி மாறன், அதன் பிறகு, இங்கு வந்து இறைவனுக்குப் புதிதாகக் கோவிலைக் கட்டுவித்துச் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டான்.
சிறப்புகள் :
இக்கோவிலில் இறைவன் பூமிநாதருடன், இறைவியாக மரகதாம்பிகை உடனிருக்கிறார். இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஐப்பசி மாதம் நடைபெறும் ‘திருக்கல்யாணம் விழா’ 10 நாட்களும், மார்கழி மாதம் நடைபெறும் ‘திருவாதிரை விழா’ 10 நாட்களும் என்று சிறப்பு விழாக்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கோவிலில் இருக்கும் இறைவனைப் பூமகள், எமதர்மன் தவிர, இந்திரன், இந்திரனின் அமைச்சரான விசுமுகன், பிரம்மன், கண்ணன், விருகன், கங்கை ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுப் பயனடைந்திருக்கின்றனர்.
அமைவிடம் :
திருநெல்வேலி புதியப் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் 28 கிலோ மீட்டர் தொலைவில் வீரவநல்லூர் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து வீரவநல்லூருக்கு நகரப்பேருந்து வசதியும் உள்ளது.
வழிபாட்டுப் பலன்கள் :
* எமனை உயிர்ப்பித்த இத்தல இறைவனை வழிபடுபவர் களுக்கு, வயதான காலத்தில் வரும் மரண பயமோ அதனால் ஏற்படும் துன்பங்களோ இருக்காது.
* நிலம், சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றியைப் பெற்றிட இத்தலத்து இறைவனை வழிபடலாம்.
* விவசாயம் மற்றும் நிலம் தொடர்புடைய தொழில்களைச் செய்து வருபவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தங்களது தொழிலில் அதிக லாபத்தினைப் பெறமுடியும்.
தல வரலாறு :
நீண்ட காலமாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த மிருகண்டு முனிவர்- மருத்துவவதி தம்பதியர், சிவபெருமானை வேண்டினர். அதன் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டனர். அவன் பதினாறு வயதில் இறந்து போய்விடுவான் என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர். சிறு வயதிலேயே தங்கள் பிள்ளை உயிரிழந்து விடுவான் என்பதை நினைத்துக் கவலையடைந்த பெற்றோருக்கு, தன்னைச் சிவபெருமான் எப்படியும் காத்தருள்வார் என்று மார்க்கண்டேயன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிறுவனான மார்க்கண்டேயன் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதுடன், சிவபெருமானிடம் முழுமையாகச் சரண்டைந்திருந்தான். அவனுக்குப் பதினாறு வயதான போது, அவனுடைய உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர் கள், சிவபெருமானிடம் ஒன்றியிருக்கும் அவனைத் தனியாகப் பிரித்து, அவன் உயிரைக் கொண்டு செல்ல முடியாது என்று நினைத்துத் திரும்பினர்.
எமதர்மன், மார்க்கண்டேயனின் உயிரைத் தானே எடுத்து வருவதாகச் சொல்லி வந்தான். இறைவனிடம் ஒன்றியிருந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காகப் பாசக்கயிற்றை வீசினான். அந்தக் கயிறு சிவபெருமானையும் சேர்த்துப் பற்றியது. அதனால் கோப மடைந்த இறைவன், அவனைத் தன் காலால் எட்டி உதைத்தார். இறைவன் தாக்குதலால் நிலை குலைந்த அவன் அங்கிருந்து தென்பகுதியில் வந்து விழுந்தான். செயலற்றுப் போன அவன், ஒரு சாதாரணக் கொடியாக மாறிப் போனான்.
இதனால் எமன் தனது பணியைச் செய்ய முடியாமல் போனது. பூமியில் இருப்பவர்களுக்கு இறப்பு இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து, பூமியின் எடையும் அதிகமாகத் தொடங்கியது. பூமியின் அதிக எடையைத் தாங்க முடியாத பூமித்தாய், எமதர்மன் செயலற்றுக் கிடந்த பகுதிக்கு வந்து, அங்கு ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினாள்.
அவளின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த இறைவன், அவள் வேண்டு கோளை ஏற்று, எமதர்மனை உயிர்ப்பித்துத் தந்தார். பின்னர் அவர் எமனிடம், ‘இனி சிவகணங்கள் அழைக்கும் உயிர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது. சிவபக்தர்களுக்கு மரண பயம் கொடுத்துத் துன்புறுத்தக் கூடாது’ என்றும் அறிவுரை வழங்கினார். எமனும் அதை ஏற்றுக் கொண்டார்.
சிவபெருமான் எமதர்மனுக்கு உயிர் தந்ததால் இவ்வூருக்குத் ‘தருமநல்லூர்’ என்றும், சிவனின் வீரம் வெளிப்பட்டதால் வீரவ நல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்தை பூமித்தாயே உருவாக்கி வழிபட்டதால், இத்தல இறைவன் பூமிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் கட்டுமானம் :
பாண்டிய மன்னன் அதிவீரவழுதி மாறன் என்பவனை வகுளத்தாமன் என்பவன் போரில் தோற்கடித்தான். தோல்வியுற்ற மன்னன், தனது நாடு, நகரம், மக்கள் என அனைத்தையும் இழந்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனுக்குப் பூமித்தாய் வழிபட்ட சிவலிங்கம் கண்ணில் பட்டது. அவன், அந்த லிங்கத்தின் முன்பாக அமர்ந்து, தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற உதவும்படி வேண்டி வழிபட்டான்.
அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய இறைவன், ‘மன்னா! உன்னிடம் மீத மிருக்கும் சிறு படையைக் கொண்டு மீண்டும் அவனை எதிர்த்துப் போரிடு. அந்தப் போரில் உனக்கு வெற்றி கிடைக்கும். அதன் பின்பு, இங்கு வந்து எனக்குக் கோவில் எழுப்பி வழிபாடுகளைச் செய்க’ என்று அசரீரியாகச் சொன்னார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் மீண்டும் தனது சிறு படையுடன் அவனை எதிர்த்துப் போரிட்டான். இறைவனுடைய திருவருளால் அவனுடைய சிறு படை, எதிர்ப்படையினருக்கு அதிகமானவர்களுடன் பெரும் படையாகத் தோற்றமளித்தது. அந்தப் பெரும்படையை எதிர்த்துப் போட்டியிடப் பயந்த எதிரி, தனது படையுடன் பின்வாங்கி ஓடினான்.
தன் நாட்டைத் திரும்பப் பெற்ற மன்னன் அதிவீரவழுதி மாறன், அதன் பிறகு, இங்கு வந்து இறைவனுக்குப் புதிதாகக் கோவிலைக் கட்டுவித்துச் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டான்.
சிறப்புகள் :
இக்கோவிலில் இறைவன் பூமிநாதருடன், இறைவியாக மரகதாம்பிகை உடனிருக்கிறார். இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஐப்பசி மாதம் நடைபெறும் ‘திருக்கல்யாணம் விழா’ 10 நாட்களும், மார்கழி மாதம் நடைபெறும் ‘திருவாதிரை விழா’ 10 நாட்களும் என்று சிறப்பு விழாக்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கோவிலில் இருக்கும் இறைவனைப் பூமகள், எமதர்மன் தவிர, இந்திரன், இந்திரனின் அமைச்சரான விசுமுகன், பிரம்மன், கண்ணன், விருகன், கங்கை ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுப் பயனடைந்திருக்கின்றனர்.
அமைவிடம் :
திருநெல்வேலி புதியப் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் 28 கிலோ மீட்டர் தொலைவில் வீரவநல்லூர் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து வீரவநல்லூருக்கு நகரப்பேருந்து வசதியும் உள்ளது.
வழிபாட்டுப் பலன்கள் :
* எமனை உயிர்ப்பித்த இத்தல இறைவனை வழிபடுபவர் களுக்கு, வயதான காலத்தில் வரும் மரண பயமோ அதனால் ஏற்படும் துன்பங்களோ இருக்காது.
* நிலம், சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றியைப் பெற்றிட இத்தலத்து இறைவனை வழிபடலாம்.
* விவசாயம் மற்றும் நிலம் தொடர்புடைய தொழில்களைச் செய்து வருபவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தங்களது தொழிலில் அதிக லாபத்தினைப் பெறமுடியும்.
தெய்வீகத் தன்மை கொண்டதாக கருதப்படும் கோவில்களில் ஒன்றான ராமநாதர் கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம் ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோவில். எனவேதான், ராமாயணம் எவ்வளவு பழமையானதோ, அதே அளவு பழமையானது ராமேஸ்வரம் திருத்தலம் என்கிறார்கள். தெய்வீகத் தன்மை கொண்டதாக கருதப்படும் கோவில்களில் ஒன்றான ராமநாதர் கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
இந்துக்கள் பலரும் இந்தியாவில் உள்ள புண்ணியத்தலங்களில் நான்கு தலங்களையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகின்றனர். அவை வடக்கே பத்ரிநாத், கிழக்கே ஜகந்நாத், மேற்கே துவாரகநாத், தெற்கே ராமநாதம். இவற்றுள் ராமநாதர் கோவில் மட்டுமே சிவ தலமாகும். மற்ற மூன்றும் வைணவத் தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதர் கோவில் மூலவரை வழிபடுவதும், அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுவதும் ஒவ்வொரு இந்தும், தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது.
தல வரலாறு :
ராவணனை வதம் செய்த பிறகு, சீதையை மீட்டுக்கொண்டு புறப்பட்டார் ராமபிரான். ஆனால் ராவணனை வதம் செய்ததால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக ராமர், சிவபெருமானை வழிபட எண்ணினார். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் ராமேஸ்வரம் திருத்தலமாகும். அந்தக் கடற்கரைப் பகுதியில் சிவபெருமானை வழிபட தீர்மானித்த ராமர், அனுமனிடம் சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறி காசிக்கு அனுப்பினார்.
சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால், சீதாதேவி கடற்கரையில் உள்ள மணலிலேயே ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். ராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்றார். தனது வாலின் வலிமையைக் கொண்டு, ராமபிரான் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்றார். அதில் அனுமனுக்கு தோல்வியே கிடைத்தது. மணல் லிங்கமானது, இறுகிய பாறை போன்று உறுதியாக நின்றது கண்டு அனுமன் ஆச்சரியம் அடைந்தார்.
அனுமனை சமாதானப்படுத்திய ராமபிரான், அவர் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதல் பூஜை நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.
அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்திற்கு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் ‘காசி விசுவநாதர்’ என்ற பெயர்பெற்று விளங்குகிறது. இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. ராமனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட லிங்கம் ‘ராமநாதர்’ என்று வழங்கப்படுகிறார். இதுவே ஜோதிர்லிங்க மூர்த்தியாகவும் திகழ்கிறது.
வடக்கே உள்ள காசியும், தெற்கே உள்ள ராமேஸ்வரமும் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள், ராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைவதாக நம்பிக்கை.
கோவில் அமைப்பு :
ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோவில், சுமார் 15 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் வாசல்கள் இருந்தாலும், வடக்கு, தெற்கு வாசல்கள் உபயோகத்தில் இல்லை. கிழக்கு கோபுரம் 126 அடி உயரமும், மேற்கு கோபுரம் 78 அடி உயரமும் கொண்டது. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர், பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் தனித்தனி விமானம் கொண்ட கருவறையில் வீற்றிருக்கின்றனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கரின், லிங்கத் திருமேனியில் இப்போதும் அனுமனின் வால் தடம் இருப்பதை காணலாம்.
ராமநாதர் சன்னிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சன்னிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. பர்வதவர்த்தினி அம்பாளின் சன்னிதி, ராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. இதற்கு வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி வீற்றிருக்கிறார்.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சன்னிதி இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னிதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடை பெறும். இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது ‘சேதுபீடம்’ ஆகும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்றது இது. இதன் நேர்த்தி வேறு எந்த ஆலயங்களிலும் கிடையாது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னிதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னிதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.
இந்துக்கள் பலரும் இந்தியாவில் உள்ள புண்ணியத்தலங்களில் நான்கு தலங்களையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகின்றனர். அவை வடக்கே பத்ரிநாத், கிழக்கே ஜகந்நாத், மேற்கே துவாரகநாத், தெற்கே ராமநாதம். இவற்றுள் ராமநாதர் கோவில் மட்டுமே சிவ தலமாகும். மற்ற மூன்றும் வைணவத் தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதர் கோவில் மூலவரை வழிபடுவதும், அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுவதும் ஒவ்வொரு இந்தும், தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது.
தல வரலாறு :
ராவணனை வதம் செய்த பிறகு, சீதையை மீட்டுக்கொண்டு புறப்பட்டார் ராமபிரான். ஆனால் ராவணனை வதம் செய்ததால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக ராமர், சிவபெருமானை வழிபட எண்ணினார். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் ராமேஸ்வரம் திருத்தலமாகும். அந்தக் கடற்கரைப் பகுதியில் சிவபெருமானை வழிபட தீர்மானித்த ராமர், அனுமனிடம் சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறி காசிக்கு அனுப்பினார்.
சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால், சீதாதேவி கடற்கரையில் உள்ள மணலிலேயே ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். ராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்றார். தனது வாலின் வலிமையைக் கொண்டு, ராமபிரான் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்றார். அதில் அனுமனுக்கு தோல்வியே கிடைத்தது. மணல் லிங்கமானது, இறுகிய பாறை போன்று உறுதியாக நின்றது கண்டு அனுமன் ஆச்சரியம் அடைந்தார்.
அனுமனை சமாதானப்படுத்திய ராமபிரான், அவர் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதல் பூஜை நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.
அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்திற்கு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் ‘காசி விசுவநாதர்’ என்ற பெயர்பெற்று விளங்குகிறது. இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. ராமனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட லிங்கம் ‘ராமநாதர்’ என்று வழங்கப்படுகிறார். இதுவே ஜோதிர்லிங்க மூர்த்தியாகவும் திகழ்கிறது.
வடக்கே உள்ள காசியும், தெற்கே உள்ள ராமேஸ்வரமும் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள், ராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைவதாக நம்பிக்கை.
கோவில் அமைப்பு :
ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோவில், சுமார் 15 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் வாசல்கள் இருந்தாலும், வடக்கு, தெற்கு வாசல்கள் உபயோகத்தில் இல்லை. கிழக்கு கோபுரம் 126 அடி உயரமும், மேற்கு கோபுரம் 78 அடி உயரமும் கொண்டது. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர், பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் தனித்தனி விமானம் கொண்ட கருவறையில் வீற்றிருக்கின்றனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கரின், லிங்கத் திருமேனியில் இப்போதும் அனுமனின் வால் தடம் இருப்பதை காணலாம்.
ராமநாதர் சன்னிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சன்னிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. பர்வதவர்த்தினி அம்பாளின் சன்னிதி, ராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. இதற்கு வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி வீற்றிருக்கிறார்.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சன்னிதி இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னிதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடை பெறும். இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது ‘சேதுபீடம்’ ஆகும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்றது இது. இதன் நேர்த்தி வேறு எந்த ஆலயங்களிலும் கிடையாது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னிதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னிதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.
இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது.
சோமநாதபுரம் சோமநாதர் கோவில்
இந்த பெயரை கேட்டதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கஜினி முகமது.இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தாக்கிய ஆப்கானிஸ்தான் மன்னன் கஜினி முகமது இந்த கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான். கஜினி முகமது மட்டும் அல்ல, மேலும் பல முஸ்லிம் மன்னர்களும் இந்த கோவிலை இடித்து தள்ளினார்கள்.
இவ்வாறு 6 முறை தரைமட்டமாக்கப்பட்ட கோவில் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் நம் கண்முன் கம்பீரமாக நிற்கிறது. சோமநாதர் கோவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பிரபாஸ் பதான் என்ற இடத்தில் இருக்கிறது. இது, ஜோதிர் லிங்கம் ஆலயம் ஆகும். இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்கம் ஆலயங்கள் உள்ளன. அதில், சோமநாதபுரம் கோவில் முதன்மையானதாகும்.
இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். அரபிக்கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி (மறைந்து போன ஆறு) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோவில் அமைந்துள்ளது.
முதலில் இந்த இடத்தில் பழங்கால கோவில் இருந்துள்ளது. அதே இடத்தில் கி.பி. 649-ம் ஆண்டு அந்த பகுதியை ஆண்டு வந்த யாதவ குல மன்னர் வல்லபாய் பிரமாண்ட கோவிலை கட்டி இருக்கிறார். ஆனால், 725-ம் ஆண்டு சிந்து (பாகிஸ்தான்) பகுதியை ஆண்டு வந்த இஸ்லாமிய அரசின் கவர்னர் அல்ஜுனாபெத் படையெடுத்து வந்து சோமநாதர் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்.
அதன்பிறகு இந்த பகுதியை ஆண்ட மன்னர் 2-ம் நாகபத்ரா கி.பி. 815-ம் ஆண்டு மீண்டும் கோவிலை கட்டினார். 1025-ல் கஜினி முகமது படையெடுத்து வந்து ஆலயத்தை தாக்க வந்தார். அப்போது கோவிலில் தங்கம், முத்து, பவளம், ரத்தினம், வெள்ளி என ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. இதை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தான் கஜினி முகமது தாக்க வந் தான். அவனது படையை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக ஏராளமான மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து எதிர்த்தனர்.
அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்தி விட்டு கஜினி முகமது படை கோவிலுக்குள் புகுந்தது. சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 20 ஆயிரம் பேர் அடிமையாக சிறை பிடிக்கப்பட்டனர். அதன் பிறகுதான் படை உள்ளே நுழைய முடிந்தது. கோவிலுக்குள் புகுந்த கஜினி முகமது அத்தனை செல்வங்களையும் கொள்ளையடித்தான். கோவில் கர்ப்பகிரகத்தில் இருந்த சிவலிங்கத்தின் சிலையையும் உடைத்து எடுத்து சென்றான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து சென்றான்.
அன்றைய பண மதிப்புபடி அவன் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு 2 கோடி தினார் ஆகும். இப்போதைய கணக்குப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். கோவிலில் இருந்து அவன் 7 வண்டிகள் நிறைய தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எடுத்து சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அவன் ஊருக்கு திரும்புவதற்கு முன்பு கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டுதான் சென்றான். பின்னர் இப்பகுதியில் ஆட்சிக்கு வந்த 2-ம் குமார பாலா கோவிலை மீண்டும் கட்டினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை அவர், தங்கம், வெள்ளியால் பிரமாண்டமாக அலங்கரித்தார். ஆனாலும், கோவில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானது. 1299-ல் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி தனது தளபதி உலுக்கான் தலைமையில் படையை அனுப்பி கோவிலை தகர்க்க செய்தான்.
பின்னர் ஆட்சிக்கு வந்த மகிபாலா தேவா 1308-ல் மீண்டும் கோவிலை கட்டினார். 1395-ம் ஆண்டு மீண்டும் கோவில் இடிக்கப்பட்டது. டெல்லி சுல்தானின் குஜராத் பகுதி கவர்னராக இருந்த ஷாபர்கான் கோவிலை இடித்தான். ஆனாலும், மீண்டும் கட்டப்பட்ட கோவிலை 1451-ல் குஜராத் சுல்தான் முகமது பேகடா இடித்து தள்ளினான். அடுத்து மீண்டும் கோவிலை கட்டினார்கள். 1546-ல் இந்த பகுதியை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் பங்குக்கு கோவிலை இடித்து விட்டு சென்றனர்.
எத்தனை தடவை இடித்தாலும் மக்களும் விடவில்லை. மீண்டும் கோவிலை கட்ட 1701-ல் முகலாய மன்னன் அவுரங்கசீப் கோவிலை முற்றிலும் இடித்து தள்ளினான். இவ்வாறு 6 முறை கோவில் இடிக்கப்பட்டு இருந்தது.1782-ல் மராட்டிய மன்னர் லாகூருக்கு படையெடுத்து சென்று அந்த பகுதியை கைப்பற்றியதுடன் சோமநாத புரம் கோவிலில் இருந்து எடுத்து சென்று அங்கு வைத்திருந்த 3 வெள்ளி கதவுகளை மீட்டு வந்தார்.
இதன் பிறகு மீண்டும் கோவில் கட்டப்பட்டாலும் காலப் போக்கில் பாதிப்பு அடைந்து கோவில் மோசமான நிலையில் இருந்தது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கோவில் அமைந்துள்ள பகுதி ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்ட ஜுனாகத் சமஸ்தானத்தில் இருந்தது. ஜுனாகத் மன்னர் இந்த பகுதியை பாகிஸ் தானோடு இணைக்க முயன் றார். ஆனால், வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் கடுமை யாக போராடி இந்த பகுதியை இந்தியாவோடு இணைத்தனர்.
சிதைந்து கிடந்த கோவிலை மீண்டும் கட்ட சர்தார் வல்ல பாய் பட்டேல் மீண்டும் கட்ட உத்தரவிட்டார். ஆனால், மகாத்மா காந்தி கோவிலை அரசு பணத்தில் கட்டக்கூடாது. வேண்டுமானால் பொது மக்களிடம் நிதி திரட்டி கட்டி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதனால் அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டி மீண்டும் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இதற்குள் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் இருவருமே இறந்து விட்டனர். மத்திய மந்திரி கே.எம்.முன்ஷி தலைமையிலான அறக்கட்டளை குழு 1951-ல் கட்டுமான பணியை தொடங்கியது. அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
படிப்படியாக கட்டுமான பணி தொடர்ந்து 44 ஆண்டுகள் நடந்து 1995-ம் ஆண்டுதான் பணி முற்றிலும் நிறைவு பெற்றது. அப்போதைய ஜனாதிபதி 1.1.1995-ம் ஆண்டு கோவிலை திறந்து வைத்தார். இந்த கோவில் சாளுக்கிய மரபுப்படி கட்டப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. கோவிலின் உயரம் 115 அடி. இதன் கோபுரத்தில் 10 டன் எடையுடைய கோபுர கலசம் வைக்கப்பட்டுள்ளது. அதில், 37 அடி உயரம் கொண்ட கொடிமரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பழங்காலத்தில் மிக பிரமாண்டமாக கோவில் இருந்துள்ளது. இப்போது அந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கலை நயத்தோடு சிறப்பாக கோவில் கட்டப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவில் என்பதால் குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மட்டும் அல்ல, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மகா சிவராத்திரி விழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மன்னர்கள் காலத்தில் கோவிலை சுற்றியுள்ள 12 ஆயிரம் ஊர்களின் வருமானத்தை கோவிலுக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களும் இருந் திருக்கின்றன. கஜினி முகமது கோவி லில் கொள்ளையடித்து சென்ற சந்தன கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.
இந்த பெயரை கேட்டதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கஜினி முகமது.இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தாக்கிய ஆப்கானிஸ்தான் மன்னன் கஜினி முகமது இந்த கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான். கஜினி முகமது மட்டும் அல்ல, மேலும் பல முஸ்லிம் மன்னர்களும் இந்த கோவிலை இடித்து தள்ளினார்கள்.
இவ்வாறு 6 முறை தரைமட்டமாக்கப்பட்ட கோவில் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் நம் கண்முன் கம்பீரமாக நிற்கிறது. சோமநாதர் கோவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பிரபாஸ் பதான் என்ற இடத்தில் இருக்கிறது. இது, ஜோதிர் லிங்கம் ஆலயம் ஆகும். இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்கம் ஆலயங்கள் உள்ளன. அதில், சோமநாதபுரம் கோவில் முதன்மையானதாகும்.
இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். அரபிக்கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி (மறைந்து போன ஆறு) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோவில் அமைந்துள்ளது.
முதலில் இந்த இடத்தில் பழங்கால கோவில் இருந்துள்ளது. அதே இடத்தில் கி.பி. 649-ம் ஆண்டு அந்த பகுதியை ஆண்டு வந்த யாதவ குல மன்னர் வல்லபாய் பிரமாண்ட கோவிலை கட்டி இருக்கிறார். ஆனால், 725-ம் ஆண்டு சிந்து (பாகிஸ்தான்) பகுதியை ஆண்டு வந்த இஸ்லாமிய அரசின் கவர்னர் அல்ஜுனாபெத் படையெடுத்து வந்து சோமநாதர் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்.
அதன்பிறகு இந்த பகுதியை ஆண்ட மன்னர் 2-ம் நாகபத்ரா கி.பி. 815-ம் ஆண்டு மீண்டும் கோவிலை கட்டினார். 1025-ல் கஜினி முகமது படையெடுத்து வந்து ஆலயத்தை தாக்க வந்தார். அப்போது கோவிலில் தங்கம், முத்து, பவளம், ரத்தினம், வெள்ளி என ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. இதை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தான் கஜினி முகமது தாக்க வந் தான். அவனது படையை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக ஏராளமான மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து எதிர்த்தனர்.
அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்தி விட்டு கஜினி முகமது படை கோவிலுக்குள் புகுந்தது. சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 20 ஆயிரம் பேர் அடிமையாக சிறை பிடிக்கப்பட்டனர். அதன் பிறகுதான் படை உள்ளே நுழைய முடிந்தது. கோவிலுக்குள் புகுந்த கஜினி முகமது அத்தனை செல்வங்களையும் கொள்ளையடித்தான். கோவில் கர்ப்பகிரகத்தில் இருந்த சிவலிங்கத்தின் சிலையையும் உடைத்து எடுத்து சென்றான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து சென்றான்.
அன்றைய பண மதிப்புபடி அவன் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு 2 கோடி தினார் ஆகும். இப்போதைய கணக்குப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். கோவிலில் இருந்து அவன் 7 வண்டிகள் நிறைய தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எடுத்து சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அவன் ஊருக்கு திரும்புவதற்கு முன்பு கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டுதான் சென்றான். பின்னர் இப்பகுதியில் ஆட்சிக்கு வந்த 2-ம் குமார பாலா கோவிலை மீண்டும் கட்டினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை அவர், தங்கம், வெள்ளியால் பிரமாண்டமாக அலங்கரித்தார். ஆனாலும், கோவில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானது. 1299-ல் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி தனது தளபதி உலுக்கான் தலைமையில் படையை அனுப்பி கோவிலை தகர்க்க செய்தான்.
பின்னர் ஆட்சிக்கு வந்த மகிபாலா தேவா 1308-ல் மீண்டும் கோவிலை கட்டினார். 1395-ம் ஆண்டு மீண்டும் கோவில் இடிக்கப்பட்டது. டெல்லி சுல்தானின் குஜராத் பகுதி கவர்னராக இருந்த ஷாபர்கான் கோவிலை இடித்தான். ஆனாலும், மீண்டும் கட்டப்பட்ட கோவிலை 1451-ல் குஜராத் சுல்தான் முகமது பேகடா இடித்து தள்ளினான். அடுத்து மீண்டும் கோவிலை கட்டினார்கள். 1546-ல் இந்த பகுதியை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் பங்குக்கு கோவிலை இடித்து விட்டு சென்றனர்.
எத்தனை தடவை இடித்தாலும் மக்களும் விடவில்லை. மீண்டும் கோவிலை கட்ட 1701-ல் முகலாய மன்னன் அவுரங்கசீப் கோவிலை முற்றிலும் இடித்து தள்ளினான். இவ்வாறு 6 முறை கோவில் இடிக்கப்பட்டு இருந்தது.1782-ல் மராட்டிய மன்னர் லாகூருக்கு படையெடுத்து சென்று அந்த பகுதியை கைப்பற்றியதுடன் சோமநாத புரம் கோவிலில் இருந்து எடுத்து சென்று அங்கு வைத்திருந்த 3 வெள்ளி கதவுகளை மீட்டு வந்தார்.
இதன் பிறகு மீண்டும் கோவில் கட்டப்பட்டாலும் காலப் போக்கில் பாதிப்பு அடைந்து கோவில் மோசமான நிலையில் இருந்தது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கோவில் அமைந்துள்ள பகுதி ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்ட ஜுனாகத் சமஸ்தானத்தில் இருந்தது. ஜுனாகத் மன்னர் இந்த பகுதியை பாகிஸ் தானோடு இணைக்க முயன் றார். ஆனால், வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் கடுமை யாக போராடி இந்த பகுதியை இந்தியாவோடு இணைத்தனர்.
சிதைந்து கிடந்த கோவிலை மீண்டும் கட்ட சர்தார் வல்ல பாய் பட்டேல் மீண்டும் கட்ட உத்தரவிட்டார். ஆனால், மகாத்மா காந்தி கோவிலை அரசு பணத்தில் கட்டக்கூடாது. வேண்டுமானால் பொது மக்களிடம் நிதி திரட்டி கட்டி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதனால் அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டி மீண்டும் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இதற்குள் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் இருவருமே இறந்து விட்டனர். மத்திய மந்திரி கே.எம்.முன்ஷி தலைமையிலான அறக்கட்டளை குழு 1951-ல் கட்டுமான பணியை தொடங்கியது. அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
படிப்படியாக கட்டுமான பணி தொடர்ந்து 44 ஆண்டுகள் நடந்து 1995-ம் ஆண்டுதான் பணி முற்றிலும் நிறைவு பெற்றது. அப்போதைய ஜனாதிபதி 1.1.1995-ம் ஆண்டு கோவிலை திறந்து வைத்தார். இந்த கோவில் சாளுக்கிய மரபுப்படி கட்டப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. கோவிலின் உயரம் 115 அடி. இதன் கோபுரத்தில் 10 டன் எடையுடைய கோபுர கலசம் வைக்கப்பட்டுள்ளது. அதில், 37 அடி உயரம் கொண்ட கொடிமரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
பழங்காலத்தில் மிக பிரமாண்டமாக கோவில் இருந்துள்ளது. இப்போது அந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கலை நயத்தோடு சிறப்பாக கோவில் கட்டப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவில் என்பதால் குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மட்டும் அல்ல, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மகா சிவராத்திரி விழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மன்னர்கள் காலத்தில் கோவிலை சுற்றியுள்ள 12 ஆயிரம் ஊர்களின் வருமானத்தை கோவிலுக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களும் இருந் திருக்கின்றன. கஜினி முகமது கோவி லில் கொள்ளையடித்து சென்ற சந்தன கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது வனபத்திர காளி கோவில்.
தமிழகம் மட்டுமின்றி பாரதம் முழுதும் சக்திக்கென பல புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. வடக்கே வைஷ்ணவ தேவி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 51 சக்தி பீடங்கள் மற்றும் எண்ணற்ற ஆலயங்களில் பராசக்தி, பல்வேறு பெயர்களில், தோற்றங்களில் கருணை மழை பொழிகிறாள். திருக்கடவூரில் அமிர்தகடேசுவரருடன் அபிராமியாகவும், திருவானைக்காவில் ஜம்புகேசுவரருடன் அகிலாண்டேசுவரியாகவும், மதுரையில் சோமசுந்தரருடன் மீனாட்சியாகவும், தில்லையில் நடராசருடன் சிவகாமியாகவும் இறைவி காட்சி தருகிறார்.
அதே சமயம் காஞ்சியில் காமாட்சியாகவும், திருவேற்காட்டில் கருமாரியாகவும், சமயபுரத்தில் மாரியம்மனாகவும், புன்னைநல்லூரில் முத்துமாரியாகவும், உறையூரில் வெக்காளியாகவும், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தியாகவும், மைசூரில் சாமுண்டேசுவரியாகவும், கொல்லூரில் மூகாம்பிகையாகவும் தனிக் கோவில்களிலும் அம்பிகை அருளாட்சி செய்து வருகிறாள்.
தமிழ்நாட்டில் ஆதி தாயை, ‘கொற்றவை’ என்று வழிபட்டதாக இலக்கியங்கள் விளக்குகின்றன. ‘மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அகத்தினைப்புறனே’ என்று தொல்காப்பியம் சொல்கிறது. பிற்காலத்தில் கொற்றவை வழிபாடு ‘காளி’ மற்றும் ‘துர்க்கை’ வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது.
காளிதேவி:
ஓம், ஹ்ரீம், க்லீம் என்பன சாக்தப் பிரணவங்கள். இதில் க்லீம் என்பது காளி தேவியின் பீஜாட்சரமாகும்.
காளி அம்சத்தில் ஓம்காளி, மதுரகாளி, நித்திய காளி, ரஷா காளி, சியாமா காளி, ஸ்மசானகாளி, எல்லைக்காளி, தட்சிணகாளி, வெக்காளி, பத்திரகாளி என பல திரு உருவங்களில் ஆங்காங்கே தரிசனம் தருகின்றாள். காளி, துஷ்டர்களை நிக்ரஹம் செய்து பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் தெய்வமாகவும், வெற்றி தேவதையாகவும் வர்ணிக் கப்படுகிறாள்.
இந்த பெண் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருந்தால், சக்தி அதிகம் என்று சொல்லப்படுகிறது. பட்டீசுரம் துர்க்கையம்மன், ஐவர்பாடி மகாபிரத்தியங்கிராதேவி, துறையூர் வெக் காளியம்மன் போல, மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியும் வடக்கு நோக்கி காட்சி தருகிறாள்.
இத்திருக்கோவில் எங்கே இருக்கிறது?
வன பத்திரகாளி :
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பசுமையான மலையடிவாரத்தில், குளுமையான பவானி ஆற்றின் கரையில், வனப்பகுதியிலே எழுந்துள்ள ஆலயம். இவ்விடத்துக்கு அருகே உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் தான் ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னையின் சன்னிதிக்குள் நுழையும் போது வலப்புறம் விநாயகரும் இடதுபுறம் முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர்.
காளி என்றதும் நாக்கை தொங்க விட்டு கோரைப் பற்கள் தெரிய அரக்கனை அழிக்கும் குரூர தோற்றம் இங்கே இல்லை. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் திரிசூலம் தாங்கி சாந்த சொரூபியாய் அருளாட்சி செய்கிறாள். இதைத் தவிர இங்கே மூலத்திருமேனி, சுயம்பு வடிவில் எழுந்த லிங்கம் போன்ற வடிவில் இருப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்கிறார்கள். இவ்விரு திருமேனிகளும் கருவறையிலேயே இருப்பது சக்தியை அதிகப்படுத்துகிறது.
பிரார்த்தனை :
அருகில் உள்ள பவானி ஆற்றில் மூழ்கி எழுந்து இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளும் பகையும் விலகும், அதுவும் அமாவாசை என்றால் விசேஷம் என்று நம்பிக்கையுடன் பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். ஆடி அமாவாசை சிறப்பென்றாலும் ஒவ்வொரு அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்ய ஏற்ற நாள்.
எதிரிகள் தாக்கத்திலிருந்து விடுபடவும், திருமணத்தடை விலகவும், பிள்ளைப் பேறு கிட்டவும் பவானி ஆற்றில் இருக்கும் உருண்டைக் கற்களை எடுத்து வந்து மஞ்சள் துணியில் முடிந்து இத்திருக்கோவிலின் மேற்கு சுற்றில் நிற்கும் தொரத்தா மரத்தில் கட்டிவிட்டு வேண்டிய வரம் தர பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிவப்பு நிற காய்களுடன் நிற்கும் தொரத்தா மரம் என்னும் காட்டு மரம் தல விருட்சமாக இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு மருத்துவகுணமுடைய இம்மரத்தின் இலைகள் தோல் நோய் தீர்க்கும் திறனுடையது. இத்திருக்கோவிலின் எதிரே பூக்குண்டம் அமைக்கப்பட்டு ஆடிமாதத்தில் விழா நடைபெறுகிறது.
பஞ்சபாண்டவர்களுடன் இத்தலத்துக்குத் தொடர்புள்ளதாக ஒரு புராணக்கதை உள்ளது.
நீலமலைத் தொடரில் கோட்டை அமைத்துக் கொண்டு பாகாசுரன் என்ற அரக்கன் வலிமையுடன் ஆட்சி செய்து வந்தான். பெருந்தீனி தின்னும் அவனுக்கு, ஊர்மக்கள் உணவை வண்டியில் ஏற்றிச் சென்று கொடுக்க வேண்டும். சில சமயம் உணவு போதவில்லை என்று வண்டி மாடுகளையும், மனிதர்களையும் விழுங்கி விடுவானாம்.
இந்தக் கொடுஞ்செயலைக் கேள்விப்பட்ட பஞ்சபாண்டவரில் ஒருவனான பீமன், பாகாசுரனை அழிக்க காளி தேவியை வழிபட்டான். பின்னர் அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இறக்கும் தருவாயில் அவன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப, காளியின் காவல் பூதமாக பாகாசுரன் அமர்த்தப்பட்டான். இத்திருக்கோவிலின் முன்புறம் பாகாசுரனுக்கும், பீமனுக்கும் உருச்சிலைகள் இருப்பதும், இத்தலத்துக்கு மேற்கே உள்ள ஊட்டி மலை ஏறும் போது 52 வது வளைவில் அருகில் இருக்கும் பாகாசுரன் கோட்டையும் இந்த புராண வரலாற்றுக்குச் சான்றுகள் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும்.
‘பத்திர’ என்றால் மங்கலம் என்று பொருள்படும். இத்தலத்தில் வனத்திடையே நின்றருளும் வனபத்திரகாளி மங்கலத்தையும், வேண்டும் வரத்தையும் தருவாள் என்பது வழிபடுவோரின் நம்பிக்கை.
அதே சமயம் காஞ்சியில் காமாட்சியாகவும், திருவேற்காட்டில் கருமாரியாகவும், சமயபுரத்தில் மாரியம்மனாகவும், புன்னைநல்லூரில் முத்துமாரியாகவும், உறையூரில் வெக்காளியாகவும், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தியாகவும், மைசூரில் சாமுண்டேசுவரியாகவும், கொல்லூரில் மூகாம்பிகையாகவும் தனிக் கோவில்களிலும் அம்பிகை அருளாட்சி செய்து வருகிறாள்.
தமிழ்நாட்டில் ஆதி தாயை, ‘கொற்றவை’ என்று வழிபட்டதாக இலக்கியங்கள் விளக்குகின்றன. ‘மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அகத்தினைப்புறனே’ என்று தொல்காப்பியம் சொல்கிறது. பிற்காலத்தில் கொற்றவை வழிபாடு ‘காளி’ மற்றும் ‘துர்க்கை’ வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது.
காளிதேவி:
ஓம், ஹ்ரீம், க்லீம் என்பன சாக்தப் பிரணவங்கள். இதில் க்லீம் என்பது காளி தேவியின் பீஜாட்சரமாகும்.
காளி அம்சத்தில் ஓம்காளி, மதுரகாளி, நித்திய காளி, ரஷா காளி, சியாமா காளி, ஸ்மசானகாளி, எல்லைக்காளி, தட்சிணகாளி, வெக்காளி, பத்திரகாளி என பல திரு உருவங்களில் ஆங்காங்கே தரிசனம் தருகின்றாள். காளி, துஷ்டர்களை நிக்ரஹம் செய்து பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் தெய்வமாகவும், வெற்றி தேவதையாகவும் வர்ணிக் கப்படுகிறாள்.
இந்த பெண் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருந்தால், சக்தி அதிகம் என்று சொல்லப்படுகிறது. பட்டீசுரம் துர்க்கையம்மன், ஐவர்பாடி மகாபிரத்தியங்கிராதேவி, துறையூர் வெக் காளியம்மன் போல, மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியும் வடக்கு நோக்கி காட்சி தருகிறாள்.
இத்திருக்கோவில் எங்கே இருக்கிறது?
வன பத்திரகாளி :
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பசுமையான மலையடிவாரத்தில், குளுமையான பவானி ஆற்றின் கரையில், வனப்பகுதியிலே எழுந்துள்ள ஆலயம். இவ்விடத்துக்கு அருகே உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் தான் ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னையின் சன்னிதிக்குள் நுழையும் போது வலப்புறம் விநாயகரும் இடதுபுறம் முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர்.
காளி என்றதும் நாக்கை தொங்க விட்டு கோரைப் பற்கள் தெரிய அரக்கனை அழிக்கும் குரூர தோற்றம் இங்கே இல்லை. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் திரிசூலம் தாங்கி சாந்த சொரூபியாய் அருளாட்சி செய்கிறாள். இதைத் தவிர இங்கே மூலத்திருமேனி, சுயம்பு வடிவில் எழுந்த லிங்கம் போன்ற வடிவில் இருப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்கிறார்கள். இவ்விரு திருமேனிகளும் கருவறையிலேயே இருப்பது சக்தியை அதிகப்படுத்துகிறது.
பிரார்த்தனை :
அருகில் உள்ள பவானி ஆற்றில் மூழ்கி எழுந்து இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளும் பகையும் விலகும், அதுவும் அமாவாசை என்றால் விசேஷம் என்று நம்பிக்கையுடன் பல ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். ஆடி அமாவாசை சிறப்பென்றாலும் ஒவ்வொரு அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்ய ஏற்ற நாள்.
எதிரிகள் தாக்கத்திலிருந்து விடுபடவும், திருமணத்தடை விலகவும், பிள்ளைப் பேறு கிட்டவும் பவானி ஆற்றில் இருக்கும் உருண்டைக் கற்களை எடுத்து வந்து மஞ்சள் துணியில் முடிந்து இத்திருக்கோவிலின் மேற்கு சுற்றில் நிற்கும் தொரத்தா மரத்தில் கட்டிவிட்டு வேண்டிய வரம் தர பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிவப்பு நிற காய்களுடன் நிற்கும் தொரத்தா மரம் என்னும் காட்டு மரம் தல விருட்சமாக இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு மருத்துவகுணமுடைய இம்மரத்தின் இலைகள் தோல் நோய் தீர்க்கும் திறனுடையது. இத்திருக்கோவிலின் எதிரே பூக்குண்டம் அமைக்கப்பட்டு ஆடிமாதத்தில் விழா நடைபெறுகிறது.
பஞ்சபாண்டவர்களுடன் இத்தலத்துக்குத் தொடர்புள்ளதாக ஒரு புராணக்கதை உள்ளது.
நீலமலைத் தொடரில் கோட்டை அமைத்துக் கொண்டு பாகாசுரன் என்ற அரக்கன் வலிமையுடன் ஆட்சி செய்து வந்தான். பெருந்தீனி தின்னும் அவனுக்கு, ஊர்மக்கள் உணவை வண்டியில் ஏற்றிச் சென்று கொடுக்க வேண்டும். சில சமயம் உணவு போதவில்லை என்று வண்டி மாடுகளையும், மனிதர்களையும் விழுங்கி விடுவானாம்.
இந்தக் கொடுஞ்செயலைக் கேள்விப்பட்ட பஞ்சபாண்டவரில் ஒருவனான பீமன், பாகாசுரனை அழிக்க காளி தேவியை வழிபட்டான். பின்னர் அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இறக்கும் தருவாயில் அவன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப, காளியின் காவல் பூதமாக பாகாசுரன் அமர்த்தப்பட்டான். இத்திருக்கோவிலின் முன்புறம் பாகாசுரனுக்கும், பீமனுக்கும் உருச்சிலைகள் இருப்பதும், இத்தலத்துக்கு மேற்கே உள்ள ஊட்டி மலை ஏறும் போது 52 வது வளைவில் அருகில் இருக்கும் பாகாசுரன் கோட்டையும் இந்த புராண வரலாற்றுக்குச் சான்றுகள் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும்.
‘பத்திர’ என்றால் மங்கலம் என்று பொருள்படும். இத்தலத்தில் வனத்திடையே நின்றருளும் வனபத்திரகாளி மங்கலத்தையும், வேண்டும் வரத்தையும் தருவாள் என்பது வழிபடுவோரின் நம்பிக்கை.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும் என்று விரும்பினால், அவசியம் செல்ல வேண்டிய திருத்தலம் கோடக நல்லூர்.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும் என்று விரும்பினால், அவசியம் செல்ல வேண்டிய திருத்தலம் கோடக நல்லூர். நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். இங்கு பாயும் தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு. மனோன்மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.
இந்த ஊரின் மேற்கில் உள்ள பெரியபிரான் திருக்கோவில் கல்வெட்டுகளில் ‘கோடனூர்’ என்ற ‘குலசேகர சதுர்வேதிமங்கலம்’ என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தல வரலாறு :
பல ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டு இருந்தார். முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்து (சுள்ளி) பொறுக்குவதற்காக, முனிவரின் மகன் சென்றிருந்தான். அப்போது காட்டிற்கு வேட்டையாட வந்த பரிஷத் மகாராஜாவின் மகன், முனிவர் அமர்ந்து இருந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்தான்.
நீண்ட நேர வேட்டையாடலால் தாகம் ஏற்பட்டிருந்த ராஜ குமாரன், தண்ணீர் கேட்பதற்காக முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதில் விழவில்லை. தன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்க்காமல் இருக்கும் முனிவரின் மீது, ராஜகுமாரனுக்கு கோபம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில், முனிவரின் அருகே கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரது கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ் தியானத்தில் இருந்ததால், தனது கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக்கூட அவர் அறியவில்லை.
அப்போது முனிவரின் மகன், தனது தந்தைக்கு யாகம் செய்வதற்கான பொருட்களை சேகரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய யோகத் திறமையைக் கொண்டு, அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்துகொண்டான். இதையடுத்து அவனது கோபம், தன் தந்தையும், குருவுமானவரை அவமானப்படுத்திய ராஜகுமாரனின் மீது திரும்பியது.
‘எனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டவனின், தந்தையை பாம்பு தீண்டட்டும்’ என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாக மகாராஜாவிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்ட பரிஷத் மகாராஜா, தனது உயிரை சர்ப்பத்திடம்(பாம்பு) இருந்து காத்துக்கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் கட்டி வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரிஷத் மகாராஜாவை தீண்டியது. இதில் மகாராஜா இறந்து போனார்.
பின்னர் ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக்கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.
தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்த மாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நளமகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நளமகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள்.
பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும், தமயந்திக்கும் திருமணம் செய்து வைத்தார். நளன், ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.
பரிஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோட கனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, ‘கோடகநல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.
அதன்படி கார்கோடகன் பாம்பு கோடகநல்லூருக்கு வந்து அங்குள்ள ஈசனை வழிபட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார்கோடகநல்லூர் என்றும், கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கார்கோடகநல்லூர் என்ற பெயர் திரிந்து கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு :
இங்குள்ள கயிலாயநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இத்தலம் நவ கயிலாயத்தில் மூன்றாவது இடத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் ஆட்சி செலுத்தும் ஆலயங்களில் ஐந்தாவது இடத்தையும் பெறுகிறது. இங்குள்ள இறைவன், செவ்வாய் பகவான் வடிவில் அருள்பாலிக்கிறார். வடக்கு முகமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.
இங்குள்ள கோவிலில் சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். கயிலாச நாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்மன் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை இல்லை. கோவிலின் உள்புறத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகன், அம்பாள், சிறிய நந்தி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.
இந்தக் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடக் கிறது. சிவராத்திரி, திருவாதிரை போன்ற திருவிழாக்கள் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். இங்கு பாயும் தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு. மனோன்மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.
இந்த ஊரின் மேற்கில் உள்ள பெரியபிரான் திருக்கோவில் கல்வெட்டுகளில் ‘கோடனூர்’ என்ற ‘குலசேகர சதுர்வேதிமங்கலம்’ என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தல வரலாறு :
பல ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டு இருந்தார். முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்து (சுள்ளி) பொறுக்குவதற்காக, முனிவரின் மகன் சென்றிருந்தான். அப்போது காட்டிற்கு வேட்டையாட வந்த பரிஷத் மகாராஜாவின் மகன், முனிவர் அமர்ந்து இருந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்தான்.
நீண்ட நேர வேட்டையாடலால் தாகம் ஏற்பட்டிருந்த ராஜ குமாரன், தண்ணீர் கேட்பதற்காக முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதில் விழவில்லை. தன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்க்காமல் இருக்கும் முனிவரின் மீது, ராஜகுமாரனுக்கு கோபம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில், முனிவரின் அருகே கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரது கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ் தியானத்தில் இருந்ததால், தனது கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக்கூட அவர் அறியவில்லை.
அப்போது முனிவரின் மகன், தனது தந்தைக்கு யாகம் செய்வதற்கான பொருட்களை சேகரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய யோகத் திறமையைக் கொண்டு, அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்துகொண்டான். இதையடுத்து அவனது கோபம், தன் தந்தையும், குருவுமானவரை அவமானப்படுத்திய ராஜகுமாரனின் மீது திரும்பியது.
‘எனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டவனின், தந்தையை பாம்பு தீண்டட்டும்’ என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாக மகாராஜாவிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்ட பரிஷத் மகாராஜா, தனது உயிரை சர்ப்பத்திடம்(பாம்பு) இருந்து காத்துக்கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் கட்டி வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரிஷத் மகாராஜாவை தீண்டியது. இதில் மகாராஜா இறந்து போனார்.
பின்னர் ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக்கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.
தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்த மாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நளமகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நளமகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள்.
பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும், தமயந்திக்கும் திருமணம் செய்து வைத்தார். நளன், ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.
பரிஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோட கனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, ‘கோடகநல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.
அதன்படி கார்கோடகன் பாம்பு கோடகநல்லூருக்கு வந்து அங்குள்ள ஈசனை வழிபட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார்கோடகநல்லூர் என்றும், கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கார்கோடகநல்லூர் என்ற பெயர் திரிந்து கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு :
இங்குள்ள கயிலாயநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இத்தலம் நவ கயிலாயத்தில் மூன்றாவது இடத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் ஆட்சி செலுத்தும் ஆலயங்களில் ஐந்தாவது இடத்தையும் பெறுகிறது. இங்குள்ள இறைவன், செவ்வாய் பகவான் வடிவில் அருள்பாலிக்கிறார். வடக்கு முகமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.
இங்குள்ள கோவிலில் சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். கயிலாச நாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்மன் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை இல்லை. கோவிலின் உள்புறத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகன், அம்பாள், சிறிய நந்தி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.
இந்தக் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடக் கிறது. சிவராத்திரி, திருவாதிரை போன்ற திருவிழாக்கள் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிறைகாத்த அய்யனார் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அய்யனார் குல தெய்வமாக விளங்குகிறார். அய்யனார், சாஸ்தா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவரது வரலாறு தெய்வாம்சம் மிக்கது. சிவபெருமான், திருமால் ஆகியோரின் இரு பெரும் சக்தியின் அம்சமாக தோன்றியவர் அய்யனார்.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிறைகாத்த அய்யனார் கோவில். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். பூமியில் இருந்து தானாக, சுயம்புவாய் வெளிப்பட்ட இந்த அய்யனார் அபரிதமான சக்தி மிக்கவர். முற்காலத்தில் இந்த ஊர் வயலூர் என்று அழைக்கப்பட்டது. சோழர் ஆட்சி காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மன்னன் கரிகாலன் பகை மன்னர்களை தோற்கடித்து எதிரிநாட்டு வீரர்களை கைது செய்து இங்கே சிறை வைத்ததால் இவ்வூர் பெயர் மருவி ‘சிறையூர்’ என்றானது.
தல வரலாறு :
முன்பெல்லாம் இந்த ஊருக்கு செல்லும் வழியில் நான்கு புறமும் மரங்களும், செடிகளும் அடர்ந்து வளர்ந்து இருக்க ஒற்றையடி பாதை வழியாக செல்ல வேண்டும். அந்த வழியாக மக்கள் நடந்தும், மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அங்குள்ள ஒரு வேப்பமரம் அருகில் ஒரு சக்தி மேற்கொண்டு அவர்களை செல்ல விடாமல் தடுத்தது. உடனே அவர்கள் கற்பூரம் ஏற்றி, தீபாராதனைகாட்டி அங்கிருந்து செல்வர். பாத்திரங்களில் பால், தயிர் கொண்டு செல்பவர்கள் வேப்பமரம் அருகே சென்றவுடன் அவர்களை அறியாமலேயே நிலை தடுமாறி வேப்பமரத்தின் அடியில் பால், தயிர் பாத்திரங்கள் கவிழ்ந்து அபிஷேகம் செய்வதைப் போல கொட்டிவிடும். இந்த நிகழ்ச்சி வாடிக்கையாக நடந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் இந்த இடத்தில் தெய்வ சக்தி இருக்கிறது என்று நினைத்து அங்கு சென்று கற்பூரம் ஏற்றி வணங்கி வந்தனர்.
இந்தநிலையில் ஊர் பெரியவரின் கனவில் ஒரு காட்சி தெரிந்தது. அதில் அய்யனார் தோன்றி, வேப்பமரத்தின் கீழ் நான் புதைந்து இருக்கிறேன். பூமியை தோண்டி என்னை வெளியே எடுங்கள் என்று கூறினர். உடனே ஊர் பெரியவர் கிராம மக்களுடன் அங்கு சென்று அவர் குறிப்பிட்ட இடத்தில் மண்வெட்டியால் தோண்டினர். 3 அடி ஆழம் தோண்டியதும், புதைந்து இருந்த அய்யனார் வெளிப்பட்டார். மண்வெட்டியால் தோண்டியதில் அய்யனார் சிலையின் உதடு, இதழ், மூக்கில் வெட்டுப்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே ஊர் பொதுமக்கள் பயபக்தியுடன் அய்யனாரை வணங்கி, தெரியாமல் செய்த குற்றத்தை பொறுத்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டு கற்பூர ஆராதனை காட்டினர். அய்யனார் அருளால் உடனே ரத்தம் வடிவது நின்றது. அய்யனார் அனைவருக்கும் அருளாசி புரிந்தார். மேலும் அந்த இடத்தில் சப்தகன்னியர்கள் சிலைகளும் கிடைத்தன. ஊர் மக்கள் அய்யனாருக்கு அந்த இடத்தில் சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்த காலக்கட்டத்தில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் அய்யனார் கோவில் இருக்கும் ஒற்றையடி பாதை வழியாக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வழிப்பறி கொள்ளையர்கள் அந்தப்பெண்ணை சூழ்ந்து கொண்டனர். செய்வதறியாது திகைத்த அந்த பெண் கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பிக்க வேகமாக ஓடினாள். அப்போது தூரத்தில் ஒரு விளக்கொளி தெரிந்தது. இதனால் அங்கு வீடு இருக்க வேண்டும் என்று நினைத்த அந்த பெண், வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினாள். ஆனால் அவள் செல்ல, செல்ல வெளிச்சம் வந்த இடம் தூரமாகி கொண்டே சென்றது. அய்யனார் கோவிலுக்கு வந்த அந்தப்பெண் கதவைத் தட்டி, அய்யனாரே இந்த அபலைப் பெண்ணை காப்பாற்றும் என்று அபயக்குரல் எழுப்பினாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்களும் கோவிலுக்குள் வந்தனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. கோவிலுக்குள் கொள்ளையர்கள், கை, கால்கள் செயல் இழந்து மயங்கி விழுந்தனர். இந்த நிலையில் கோவில் நிர்வாகியின் கனவில் அய்யனார் தோன்றி கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து விட்டனர் என்று கூறினார். உடனே கோவில் நிர்வாகி வந்து பார்த்தார். கோவிலுக்குள் இளம்பெண் இருந்ததையும், கோவில் வளாகத்தில் கொள்ளையர்கள் மயங்கி கிடந்ததையும் கண்டு நிலைமையை புரிந்து கொண்டார். பின்னர் அய்யனார் கோவில் விபூதியை கொள்ளையர்கள் மீது பூசியதும் அவர்கள் சுய நினைவு வர பெற்று, செய்த தவறுக்கு வருந்தி அய்யனாரிடம் மன்னிப்பு கேட்டனர். இளம்பெண்ணை கொள்ளையர்களிடம் இருந்து காத்து, கொள்ளையர்களையும் சிறைவைத்து அவர்கள் வெளியே சென்றுவிடாமல் காவல் காத்ததால் அய்யனார் சிறை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார்.
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவருக்கு, செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து மன்னர் தீர்ப்பு கூறினார். விவசாயியின் தலையை துண்டித்து தண்டனையை நிறைவேற்றும் படி சிறை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப விவசாயி, அய்யனாரை உள்ளம் உருக வழிபட்டார். மேலும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விவசாயிக்கு மரணதண்டணை நிறைவேற்றப்படும் நேரத்தில் ஒருவர், உண்மையான குற்றவாளியை மன்னர் முன் நிறுத்தி, விவசாயியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றினார். மனித வடிவில் உண்மையான குற்றவாளியை மன்னர் முன்பு நிறுத்தியவர் சாட்சாத் அய்யனார் தான் என்று அவரது பெருமையை பக்தர்கள் இன்றும் கூறி பரவசப்பட்டு கொள்கின்றனர். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியை தேடி தரும் வல்லமை மிக்கவராக சிறைகாத்த அய்யனார் திகழ்கிறார். எனவே நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வேண்டி பக்தர்கள் இங்கு வந்து அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கின்றனர்.
கருப்பண்ணசாமி:
இங்குள்ள கருப்பண்ணசாமி திருமணத்தடை, புத்திரதோஷம் ஆகிய வற்றை போக்கும் ஆற்றல் படைத்தவர். இவரது சன்னிதியில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டு சீட்டில் எழுதி கட்டினால் 3 மாதத்திற்குள் அவை நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்பாளுக்கு 7, 9, 21 என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறைகாத்த அய்யனாருக்கு அர்ச்சனை செய்தும், கருப்பண்ணசாமிக்கு பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விநாயகர், ஸ்ரீவீரபத்திரசாமி, காமாட்சி அம்மன், பேச்சி அம்மன், சங்கிலி கருப்பண்ணசாமி, சப்த கன்னியர்கள், காட்டேரி அம்மன், ஞாலி சன்னாசி சித்தர், மாமுண்டீஸ்வரர், பெரியண்ணசாமி, காத்தவீரியன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. அய்யனார் உற்சவமூர்த்தி பூரணை, புஷ்பகலா ஆகிய 2 அம்பாள்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பால்குட திருவிழா :
வருடத்தில் பங்குனி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை பால்குட திருவிழா நடைபெறும். 18-ம் படி கருப்பண்ணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு காதுகுத்து விழாவினை பெற்றோர் எடுக்கின்றனர். அதேபோல இந்த கோவிலில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
வழியும் - தூரமும் :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்ரஹாரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம், திருவையாறு செல்லும் பஸ்சில் ஏறினால் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த கோவிலை அடையலாம்.
நோய் தீர்க்கும் பச்சிலை:
அரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சிறைகாத்த அய்யனார் கோவிலில் வில்வம் மற்றும் துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. கோவில் வளாகத்தில் பச்சிலை மரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பச்சிலைக்கு, நோய் தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த மரத்தின் இலையை ஒன்று, இரண்டு தின்றால் நோய் குணமாகிறது என்கிறார்கள். இந்த இலையை பறித்து கோவிலில் வைத்து அர்ச்சனை செய்தும் எடுத்து செல்கிறார்கள்.
சப்த கன்னியர் :
ஒருமுறை தேவலோகத்தில் இருந்து சப்த கன்னியர்கள் பூலோகம் வந்து, காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது ஒரு வேடன் அவர்களை சிறைப்பிடித்தான். சப்த கன்னியர்கள் வேடனின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அபயக் குரல் எழுப்பினர். உடனே அய்யனார் அங்கு வந்து வேடனிடம் இருந்து சப்தகன்னியர்களை மீட்டார். இதை நினைவுகூரும் விதமாக ஆலயத்தில் சப்த கன்னியர்களுடன் வேடனின் சிலையும் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிறைகாத்த அய்யனார் கோவில். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். பூமியில் இருந்து தானாக, சுயம்புவாய் வெளிப்பட்ட இந்த அய்யனார் அபரிதமான சக்தி மிக்கவர். முற்காலத்தில் இந்த ஊர் வயலூர் என்று அழைக்கப்பட்டது. சோழர் ஆட்சி காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மன்னன் கரிகாலன் பகை மன்னர்களை தோற்கடித்து எதிரிநாட்டு வீரர்களை கைது செய்து இங்கே சிறை வைத்ததால் இவ்வூர் பெயர் மருவி ‘சிறையூர்’ என்றானது.
தல வரலாறு :
முன்பெல்லாம் இந்த ஊருக்கு செல்லும் வழியில் நான்கு புறமும் மரங்களும், செடிகளும் அடர்ந்து வளர்ந்து இருக்க ஒற்றையடி பாதை வழியாக செல்ல வேண்டும். அந்த வழியாக மக்கள் நடந்தும், மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அங்குள்ள ஒரு வேப்பமரம் அருகில் ஒரு சக்தி மேற்கொண்டு அவர்களை செல்ல விடாமல் தடுத்தது. உடனே அவர்கள் கற்பூரம் ஏற்றி, தீபாராதனைகாட்டி அங்கிருந்து செல்வர். பாத்திரங்களில் பால், தயிர் கொண்டு செல்பவர்கள் வேப்பமரம் அருகே சென்றவுடன் அவர்களை அறியாமலேயே நிலை தடுமாறி வேப்பமரத்தின் அடியில் பால், தயிர் பாத்திரங்கள் கவிழ்ந்து அபிஷேகம் செய்வதைப் போல கொட்டிவிடும். இந்த நிகழ்ச்சி வாடிக்கையாக நடந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் இந்த இடத்தில் தெய்வ சக்தி இருக்கிறது என்று நினைத்து அங்கு சென்று கற்பூரம் ஏற்றி வணங்கி வந்தனர்.
இந்தநிலையில் ஊர் பெரியவரின் கனவில் ஒரு காட்சி தெரிந்தது. அதில் அய்யனார் தோன்றி, வேப்பமரத்தின் கீழ் நான் புதைந்து இருக்கிறேன். பூமியை தோண்டி என்னை வெளியே எடுங்கள் என்று கூறினர். உடனே ஊர் பெரியவர் கிராம மக்களுடன் அங்கு சென்று அவர் குறிப்பிட்ட இடத்தில் மண்வெட்டியால் தோண்டினர். 3 அடி ஆழம் தோண்டியதும், புதைந்து இருந்த அய்யனார் வெளிப்பட்டார். மண்வெட்டியால் தோண்டியதில் அய்யனார் சிலையின் உதடு, இதழ், மூக்கில் வெட்டுப்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே ஊர் பொதுமக்கள் பயபக்தியுடன் அய்யனாரை வணங்கி, தெரியாமல் செய்த குற்றத்தை பொறுத்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டு கற்பூர ஆராதனை காட்டினர். அய்யனார் அருளால் உடனே ரத்தம் வடிவது நின்றது. அய்யனார் அனைவருக்கும் அருளாசி புரிந்தார். மேலும் அந்த இடத்தில் சப்தகன்னியர்கள் சிலைகளும் கிடைத்தன. ஊர் மக்கள் அய்யனாருக்கு அந்த இடத்தில் சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்த காலக்கட்டத்தில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் அய்யனார் கோவில் இருக்கும் ஒற்றையடி பாதை வழியாக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வழிப்பறி கொள்ளையர்கள் அந்தப்பெண்ணை சூழ்ந்து கொண்டனர். செய்வதறியாது திகைத்த அந்த பெண் கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பிக்க வேகமாக ஓடினாள். அப்போது தூரத்தில் ஒரு விளக்கொளி தெரிந்தது. இதனால் அங்கு வீடு இருக்க வேண்டும் என்று நினைத்த அந்த பெண், வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினாள். ஆனால் அவள் செல்ல, செல்ல வெளிச்சம் வந்த இடம் தூரமாகி கொண்டே சென்றது. அய்யனார் கோவிலுக்கு வந்த அந்தப்பெண் கதவைத் தட்டி, அய்யனாரே இந்த அபலைப் பெண்ணை காப்பாற்றும் என்று அபயக்குரல் எழுப்பினாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்களும் கோவிலுக்குள் வந்தனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. கோவிலுக்குள் கொள்ளையர்கள், கை, கால்கள் செயல் இழந்து மயங்கி விழுந்தனர். இந்த நிலையில் கோவில் நிர்வாகியின் கனவில் அய்யனார் தோன்றி கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து விட்டனர் என்று கூறினார். உடனே கோவில் நிர்வாகி வந்து பார்த்தார். கோவிலுக்குள் இளம்பெண் இருந்ததையும், கோவில் வளாகத்தில் கொள்ளையர்கள் மயங்கி கிடந்ததையும் கண்டு நிலைமையை புரிந்து கொண்டார். பின்னர் அய்யனார் கோவில் விபூதியை கொள்ளையர்கள் மீது பூசியதும் அவர்கள் சுய நினைவு வர பெற்று, செய்த தவறுக்கு வருந்தி அய்யனாரிடம் மன்னிப்பு கேட்டனர். இளம்பெண்ணை கொள்ளையர்களிடம் இருந்து காத்து, கொள்ளையர்களையும் சிறைவைத்து அவர்கள் வெளியே சென்றுவிடாமல் காவல் காத்ததால் அய்யனார் சிறை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார்.
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவருக்கு, செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து மன்னர் தீர்ப்பு கூறினார். விவசாயியின் தலையை துண்டித்து தண்டனையை நிறைவேற்றும் படி சிறை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப விவசாயி, அய்யனாரை உள்ளம் உருக வழிபட்டார். மேலும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விவசாயிக்கு மரணதண்டணை நிறைவேற்றப்படும் நேரத்தில் ஒருவர், உண்மையான குற்றவாளியை மன்னர் முன் நிறுத்தி, விவசாயியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றினார். மனித வடிவில் உண்மையான குற்றவாளியை மன்னர் முன்பு நிறுத்தியவர் சாட்சாத் அய்யனார் தான் என்று அவரது பெருமையை பக்தர்கள் இன்றும் கூறி பரவசப்பட்டு கொள்கின்றனர். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியை தேடி தரும் வல்லமை மிக்கவராக சிறைகாத்த அய்யனார் திகழ்கிறார். எனவே நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வேண்டி பக்தர்கள் இங்கு வந்து அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கின்றனர்.
கருப்பண்ணசாமி:
இங்குள்ள கருப்பண்ணசாமி திருமணத்தடை, புத்திரதோஷம் ஆகிய வற்றை போக்கும் ஆற்றல் படைத்தவர். இவரது சன்னிதியில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டு சீட்டில் எழுதி கட்டினால் 3 மாதத்திற்குள் அவை நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்பாளுக்கு 7, 9, 21 என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறைகாத்த அய்யனாருக்கு அர்ச்சனை செய்தும், கருப்பண்ணசாமிக்கு பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விநாயகர், ஸ்ரீவீரபத்திரசாமி, காமாட்சி அம்மன், பேச்சி அம்மன், சங்கிலி கருப்பண்ணசாமி, சப்த கன்னியர்கள், காட்டேரி அம்மன், ஞாலி சன்னாசி சித்தர், மாமுண்டீஸ்வரர், பெரியண்ணசாமி, காத்தவீரியன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. அய்யனார் உற்சவமூர்த்தி பூரணை, புஷ்பகலா ஆகிய 2 அம்பாள்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பால்குட திருவிழா :
வருடத்தில் பங்குனி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை பால்குட திருவிழா நடைபெறும். 18-ம் படி கருப்பண்ணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு காதுகுத்து விழாவினை பெற்றோர் எடுக்கின்றனர். அதேபோல இந்த கோவிலில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
வழியும் - தூரமும் :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்ரஹாரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம், திருவையாறு செல்லும் பஸ்சில் ஏறினால் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த கோவிலை அடையலாம்.
நோய் தீர்க்கும் பச்சிலை:
அரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சிறைகாத்த அய்யனார் கோவிலில் வில்வம் மற்றும் துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. கோவில் வளாகத்தில் பச்சிலை மரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பச்சிலைக்கு, நோய் தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த மரத்தின் இலையை ஒன்று, இரண்டு தின்றால் நோய் குணமாகிறது என்கிறார்கள். இந்த இலையை பறித்து கோவிலில் வைத்து அர்ச்சனை செய்தும் எடுத்து செல்கிறார்கள்.
சப்த கன்னியர் :
ஒருமுறை தேவலோகத்தில் இருந்து சப்த கன்னியர்கள் பூலோகம் வந்து, காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது ஒரு வேடன் அவர்களை சிறைப்பிடித்தான். சப்த கன்னியர்கள் வேடனின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அபயக் குரல் எழுப்பினர். உடனே அய்யனார் அங்கு வந்து வேடனிடம் இருந்து சப்தகன்னியர்களை மீட்டார். இதை நினைவுகூரும் விதமாக ஆலயத்தில் சப்த கன்னியர்களுடன் வேடனின் சிலையும் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.
அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார்.
தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.
சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.
பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம் அல்லவா?
மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.

ஆலய அமைப்பு :
இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சூரியகோடீஸ்வரர். இறைவியின் பெயர் பவளக்கொடி. இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் பிரகாரத்தில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.
வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.
பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.
பைரவர் :
இத்தல பைரவர் சொர்ண பைரவர் என அழைக்கப்படு கிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் சன்னமாக பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி என கூறுகின்றனர் பக்தர்கள்.
இந்த பைரவர் தன் கழுத்து பவளமணியின் ஏழு ஒளிக் கிரகணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரகணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தவிர பணத்தட்டுபாடு, ஏழ்மை வறுமையை போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.
இங்குள்ள துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. இந்த துர்க்கை தனது ஒரு காலை முன்நோக்கி வைத்துள்ளாள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோவில் அர்ச்சகர் விளக்குகிறார்.
சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோவிலில் அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந் திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால், கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அகத்திய முனிவர் :
சுக்ராச்சாரியார், தான் இழந்த கண் பார்வையை மீட்க பல தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்தார். அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜ களைச் செய்தார். சூரிய கோடீஸ்வரரை வழிபட்டார். இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ராமபிரானுக்கு அகத்திய முனியவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாக கூறப்படு கிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..
சூரியன் சக்தி பெற்ற கதை :
தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு அனைவரையும் அழைத்தான். ஆனால் தான் என்ற அகந்தை தலைக்கு ஏறியதால் சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்டார் சிவபெருமான். இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர். எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர்.
சூரியன் ஒளியை இழந்ததால் அண்ட சராசரங்கள் இருளில் மூழ்கின. தட்சன் நடத்திய யாகத்தில் தான் கலந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் சூரியன். ‘எனக்குள் ஈசன் ஒளிர வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக்கேட்டு குருவின் முன் கலங்கி நின்றான்.
குரு இலுப்பை மரங்கள் நிறைந்த வனத்தைக் காட்டினார். சூரியன் அந்த வனத்தை அடைந்ததும் தன்னால் ஓர் பேரொளி படர்வதை உணர்ந்தான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனை தினந்தினம் பூஜித்தான். இழந்த தன் முழு சக்தியையும் பெற்றான். எத்தனை யுகமானாலும் தன்னுடைய முதல் கதிரை இத்தலத்து இறைவனின் மீது செலுத்தி வணங்கி விட்டுதான் பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களை பாய்சுவதாக புராணத் தகவல் கூறுகிறது.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான். எனவே அதை வேறுபடுத்தி காட்டவே இத்தலம் கீழச் சூரிய மூலை என அழைக்கப்படுகிறது.
இருப்பிடம் :
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.
பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார்.
தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.
சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.
பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம் அல்லவா?
மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.

ஆலய அமைப்பு :
இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சூரியகோடீஸ்வரர். இறைவியின் பெயர் பவளக்கொடி. இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் பிரகாரத்தில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.
வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.
பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.
பைரவர் :
இத்தல பைரவர் சொர்ண பைரவர் என அழைக்கப்படு கிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் சன்னமாக பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி என கூறுகின்றனர் பக்தர்கள்.
இந்த பைரவர் தன் கழுத்து பவளமணியின் ஏழு ஒளிக் கிரகணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரகணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தவிர பணத்தட்டுபாடு, ஏழ்மை வறுமையை போக்கக் கூடியவர் இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.
இங்குள்ள துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. இந்த துர்க்கை தனது ஒரு காலை முன்நோக்கி வைத்துள்ளாள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் என கோவில் அர்ச்சகர் விளக்குகிறார்.
சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோவிலில் அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந் திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால், கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அகத்திய முனிவர் :
சுக்ராச்சாரியார், தான் இழந்த கண் பார்வையை மீட்க பல தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்தார். அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜ களைச் செய்தார். சூரிய கோடீஸ்வரரை வழிபட்டார். இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ராமபிரானுக்கு அகத்திய முனியவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாக கூறப்படு கிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..
சூரியன் சக்தி பெற்ற கதை :
தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு அனைவரையும் அழைத்தான். ஆனால் தான் என்ற அகந்தை தலைக்கு ஏறியதால் சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்டார் சிவபெருமான். இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர். எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர்.
சூரியன் ஒளியை இழந்ததால் அண்ட சராசரங்கள் இருளில் மூழ்கின. தட்சன் நடத்திய யாகத்தில் தான் கலந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் சூரியன். ‘எனக்குள் ஈசன் ஒளிர வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக்கேட்டு குருவின் முன் கலங்கி நின்றான்.
குரு இலுப்பை மரங்கள் நிறைந்த வனத்தைக் காட்டினார். சூரியன் அந்த வனத்தை அடைந்ததும் தன்னால் ஓர் பேரொளி படர்வதை உணர்ந்தான். கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனை தினந்தினம் பூஜித்தான். இழந்த தன் முழு சக்தியையும் பெற்றான். எத்தனை யுகமானாலும் தன்னுடைய முதல் கதிரை இத்தலத்து இறைவனின் மீது செலுத்தி வணங்கி விட்டுதான் பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களை பாய்சுவதாக புராணத் தகவல் கூறுகிறது.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான். எனவே அதை வேறுபடுத்தி காட்டவே இத்தலம் கீழச் சூரிய மூலை என அழைக்கப்படுகிறது.
இருப்பிடம் :
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் சுந்தரராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் சுந்தரராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
கோவில் வரலாறு :
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மெய்யூரில் ஏராளமான வைணவக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் தினமும் காலையில் புறப்பட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றங்கரைக்கு வந்து நீராடுவார்கள். பின்னர் பெருமாளை நினைத்து பாடல்களை பாடியபடி மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் பாலாற்றில் இறை சிந்தனையுடன் குளித்துக் கொண்டிருக்கையில், நீருக்குள் ஏதோ ஒரு பொருள் இடறியது. ஒரு பக்தர், தண்ணீரில் மூழ்கி ‘அது என்ன?’ என்று அரிய முற்பட்டார்.
பொருளின் எடை அதிகமாக இருந்ததால், மேலும் சிலரை உதவிக்கு அழைத்து, அந்தப் பொருளை வெளியே கொண்டு வந்தனர். அப்போது தான் அது பெருமாளின் பஞ்சலோக சிலை என்பது தெரியவந்தது. பக்தர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். மேலும் அவர்களை மகிழ்வடையச் செய்யும் வகையில், நீருக்கடியில் தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன.
அனைத்து விக்கிரகங்களையும், தங்கள் ஊரில் உள்ள சிறிய கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். இந்த விக்கிரகங்கள் பற்றிய விவரங்களை அறிய முயன்றபோது, அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது.
நாகை பாசுரங்கள் :
திருமங்கையாழ்வார் தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு, நாகப்பட்டினத்தில் கோலோச்சும் சவுந்திரராஜப் பெருமாளின் அழகினில் தன்னை மறந்து, பாசுரங்கள் பாடி யிருக்கிறார். நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங் களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள். திருமங்கையாழ்வார் பாடிய நாகைத் தலப் பாசுரங்களே இன்றும் மெய்யூர் பெருமாளுக்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நித்ய கைங்கர்யங்களும், சேவா காலமும் நடைபெறுகிறது.
ஆலய அமைப்பு :
இக்கோவில் பல்லவர் காலத்தைச் சார்ந்தது என சிலர் கூறுகின்றனர். இந்தக் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கோவில் நுழைவு வாசல் மட்டுமே உள்ளது. இதைக் கடந்து சென்றால், தீப ஸ்தம்பம், அதையடுத்து பலிபீடம் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பிரகாரப்பகுதி சற்று விசாலமாக உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் நுழைந்தால், சுந்தரராஜப் பெருமாளை நோக்கிய வண்ணம் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் கை கூப்பிய வண்ணம் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.
கருடாழ்வார் சன்னிதிக்கு நேரெதிரே, கிழக்கு நோக்கிய திசையில் தனிச்சன்னிதியில் சவுந்தர்யமான, புன்னகை கோலத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக் கிறார்கள்.
பெருமாள் சன்னிதிக்கு வலப்பக்கத்தில் தனிச்சன்னிதியில் தாயார் எழுந்தருளியுள்ளார். தாயாரின் திருநாமம் சுந்தரவல்லி என்பதாகும். பத்மாசன கோலத்தில், வலது கையில் அபய முத்திரையுடனும், இடது கை கீழ் நோக்கிய வண்ணமாய் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சிரித்த முகத்துடன், பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறாள் இந்த தாயார். பக்தர்கள் தரிசனம் முடித்து செல்கையில், அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்படியான திருமுகம் இந்த தாயாருக்கு. இத்திருத்தல அபிமானிகள் தங்களுக்கு சங்கடம் ஏற்பட்டால் முதலில் இத்தலத் தாயாரிடம் கோரிக்கை வைத்து பலனடைந்து வருகின்றனர்.
மற்ற சன்னிதிகள் :
பெருமாள் சன்னிதிக்கு இடப்பக்கத்தில் ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை கடந்து வந்தால் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் உருவங்கள் கல்லினால் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அவர் களுக்கு முன் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் உற்சவர் விக்கிரகங்களை காணலாம்.
இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசேஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவம், பவித்ரோத்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, மாசியில் லட்சார்ச்சனை, பங்குனி உத்திரம், ஆழ்வார், ஆச்சாரியர்கள் திருநட்சத்திரங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் :
இந்த ஆலயத்தில் நீண்டகாலமாக ஆஞ்சநேயர் சன்னிதி தனியாக கிடையாது. கருடாழ்வார் சன்னிதியில், அவரது பாதத்தின் கீழ்தான் ஆஞ்சநேயர் காட்சியளித்து வந்தார். சில வருடங்களாக கோவிலில் நித்ய கைங்கர்யங்கள் கூட நடைபெறாத நிலை ஏற்பட்டது. ஊர் மக்களும், கோவில் கைங்கர்ய சபாவினரும் மிகுந்த வேதனையில் இருந்த போது, அந்த ஊருக்கு வந்த ஒரு பெரியவர், கோவிலைச் சுற்றிப்பார்த்தார். பின்னர் அவர், ‘கருடாழ்வாருக்கு கீழே ஆஞ்சநேயர் இருக்கக் கூடாது’ என்று எடுத்துரைத்தார். மேலும் ‘இந்த அமைப்பு ஊர் சுபிட்சம் அடைய தடையாகவே இருக்கும். எனவே ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி கட்டுங்கள்’ என்றார். இதையடுத்து ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டது. அதன் பிறகே கோவிலில் எந்தப் பிரச்சினையும் இன்றி, தினசரி பூஜைகள் நடைபெறத் தொடங்கின. ஆலயமும் பிரசித்திப்பெறத் தொடங்கியது.
அமைவிடம் :
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்துள்ள பாலாற்று பாலத்தைத் தாண்டியதும் வலது பக்கம் ஒரு சாலை பிரியும். அந்த சாலையில் 2½ கிலோமீட்டர் தூரம் சென்றால் மெய்யூர் திருத்தலத்தை அடையலாம். செங்கல்பட்டிலிருந்து பினாயூர், பிலாப்பூர், ஒரங்காட்டுப்பேட்டை, சித்தனகாவூர் செல்லும் பேருந்துகளின் மூலமும் மெய்யூர் வந்து சேரலாம். சென்னை கோயம்பேட்டில் இருந்தும் மெய்யூர் செல்ல பஸ் வசதி உள்ளது.
கோவில் வரலாறு :
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மெய்யூரில் ஏராளமான வைணவக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் தினமும் காலையில் புறப்பட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றங்கரைக்கு வந்து நீராடுவார்கள். பின்னர் பெருமாளை நினைத்து பாடல்களை பாடியபடி மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் பாலாற்றில் இறை சிந்தனையுடன் குளித்துக் கொண்டிருக்கையில், நீருக்குள் ஏதோ ஒரு பொருள் இடறியது. ஒரு பக்தர், தண்ணீரில் மூழ்கி ‘அது என்ன?’ என்று அரிய முற்பட்டார்.
பொருளின் எடை அதிகமாக இருந்ததால், மேலும் சிலரை உதவிக்கு அழைத்து, அந்தப் பொருளை வெளியே கொண்டு வந்தனர். அப்போது தான் அது பெருமாளின் பஞ்சலோக சிலை என்பது தெரியவந்தது. பக்தர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். மேலும் அவர்களை மகிழ்வடையச் செய்யும் வகையில், நீருக்கடியில் தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன.
அனைத்து விக்கிரகங்களையும், தங்கள் ஊரில் உள்ள சிறிய கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். இந்த விக்கிரகங்கள் பற்றிய விவரங்களை அறிய முயன்றபோது, அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது.
நாகை பாசுரங்கள் :
திருமங்கையாழ்வார் தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு, நாகப்பட்டினத்தில் கோலோச்சும் சவுந்திரராஜப் பெருமாளின் அழகினில் தன்னை மறந்து, பாசுரங்கள் பாடி யிருக்கிறார். நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங் களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள். திருமங்கையாழ்வார் பாடிய நாகைத் தலப் பாசுரங்களே இன்றும் மெய்யூர் பெருமாளுக்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நித்ய கைங்கர்யங்களும், சேவா காலமும் நடைபெறுகிறது.
ஆலய அமைப்பு :
இக்கோவில் பல்லவர் காலத்தைச் சார்ந்தது என சிலர் கூறுகின்றனர். இந்தக் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கோவில் நுழைவு வாசல் மட்டுமே உள்ளது. இதைக் கடந்து சென்றால், தீப ஸ்தம்பம், அதையடுத்து பலிபீடம் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பிரகாரப்பகுதி சற்று விசாலமாக உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் நுழைந்தால், சுந்தரராஜப் பெருமாளை நோக்கிய வண்ணம் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் கை கூப்பிய வண்ணம் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.
கருடாழ்வார் சன்னிதிக்கு நேரெதிரே, கிழக்கு நோக்கிய திசையில் தனிச்சன்னிதியில் சவுந்தர்யமான, புன்னகை கோலத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக் கிறார்கள்.
பெருமாள் சன்னிதிக்கு வலப்பக்கத்தில் தனிச்சன்னிதியில் தாயார் எழுந்தருளியுள்ளார். தாயாரின் திருநாமம் சுந்தரவல்லி என்பதாகும். பத்மாசன கோலத்தில், வலது கையில் அபய முத்திரையுடனும், இடது கை கீழ் நோக்கிய வண்ணமாய் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சிரித்த முகத்துடன், பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறாள் இந்த தாயார். பக்தர்கள் தரிசனம் முடித்து செல்கையில், அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்படியான திருமுகம் இந்த தாயாருக்கு. இத்திருத்தல அபிமானிகள் தங்களுக்கு சங்கடம் ஏற்பட்டால் முதலில் இத்தலத் தாயாரிடம் கோரிக்கை வைத்து பலனடைந்து வருகின்றனர்.
மற்ற சன்னிதிகள் :
பெருமாள் சன்னிதிக்கு இடப்பக்கத்தில் ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை கடந்து வந்தால் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் உருவங்கள் கல்லினால் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அவர் களுக்கு முன் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் உற்சவர் விக்கிரகங்களை காணலாம்.
இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசேஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவம், பவித்ரோத்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, மாசியில் லட்சார்ச்சனை, பங்குனி உத்திரம், ஆழ்வார், ஆச்சாரியர்கள் திருநட்சத்திரங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் :
இந்த ஆலயத்தில் நீண்டகாலமாக ஆஞ்சநேயர் சன்னிதி தனியாக கிடையாது. கருடாழ்வார் சன்னிதியில், அவரது பாதத்தின் கீழ்தான் ஆஞ்சநேயர் காட்சியளித்து வந்தார். சில வருடங்களாக கோவிலில் நித்ய கைங்கர்யங்கள் கூட நடைபெறாத நிலை ஏற்பட்டது. ஊர் மக்களும், கோவில் கைங்கர்ய சபாவினரும் மிகுந்த வேதனையில் இருந்த போது, அந்த ஊருக்கு வந்த ஒரு பெரியவர், கோவிலைச் சுற்றிப்பார்த்தார். பின்னர் அவர், ‘கருடாழ்வாருக்கு கீழே ஆஞ்சநேயர் இருக்கக் கூடாது’ என்று எடுத்துரைத்தார். மேலும் ‘இந்த அமைப்பு ஊர் சுபிட்சம் அடைய தடையாகவே இருக்கும். எனவே ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி கட்டுங்கள்’ என்றார். இதையடுத்து ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டது. அதன் பிறகே கோவிலில் எந்தப் பிரச்சினையும் இன்றி, தினசரி பூஜைகள் நடைபெறத் தொடங்கின. ஆலயமும் பிரசித்திப்பெறத் தொடங்கியது.
அமைவிடம் :
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்துள்ள பாலாற்று பாலத்தைத் தாண்டியதும் வலது பக்கம் ஒரு சாலை பிரியும். அந்த சாலையில் 2½ கிலோமீட்டர் தூரம் சென்றால் மெய்யூர் திருத்தலத்தை அடையலாம். செங்கல்பட்டிலிருந்து பினாயூர், பிலாப்பூர், ஒரங்காட்டுப்பேட்டை, சித்தனகாவூர் செல்லும் பேருந்துகளின் மூலமும் மெய்யூர் வந்து சேரலாம். சென்னை கோயம்பேட்டில் இருந்தும் மெய்யூர் செல்ல பஸ் வசதி உள்ளது.
சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஒன்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ளது.
சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஒன்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ளது. இங்குள்ள இறைவன் திருநாமம் அண்ணாமலையார். இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன். பஞ்சபூத தலங்களில் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலைக்கு தென் திசையில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால் இது ‘தென் திருவண்ணாமலை’ என போற்றப்படுகிறது.
தலபுராணம் :
மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூன் பாண்டியன், சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்கு தீங்குகள் செய்து வந்தான். இதைக் கண்டு மனம் வருந்திய அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவ நெறி தழைத்தோங்க விரும்பி, திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள். இதை அறிந்த மன்னன், திருஞானசம்பந்தரை மதுரையில் இருந்து வெளியேற உத்தரவிட்டான். அன்று இரவு திருஞானசம்பந்தரும், சிவனடியார்களும் தங்கியிருந்த மடத்துக்கு சிலர் தீவைத்தனர். திருஞானசம்பந்தரோ ‘இந்த தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ என்று பாடினார்.
சம்பந்தர் வாக்கு உடனே பலித்தது. அந்த தீ மன்னனிடம் சென்று, அவனுக்கு வெப்பு நோயை உண்டாக்கியது. அந்த நோயை போக்கிட பலரும் கடும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. நோயின் கொடுமை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மங்கையர்க்கரசி மன்னனிடம் சென்று, ‘திருஞானசம்பந்தருக்கு தீங்கு இழைத்த தால்தான் இந்த நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு வரவழைத்தால்தான் நோய் குணமாகும்’ என்றாள்.
அதற்கு மன்னன் இசைவு தர, மங்கையர்க்கரசியின் வேண்டு கோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்குச் சென்றார். ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்று திருப்பதிகத்தை பாடி மன்னனின் உடல் மீது தம் திருக்கரத்தால் திருநீற்றைப் பூசினார். அவரது வெப்பு நோய் உடனடியாக தீர்ந்தது. மன்னன் திருஞானசம்பந்தரை வணங்கினான். திருஞானசம்பந்தர் மன்னனிடம், ‘அரசே! இறைவன் அருளால் உன் உடலை அக்கினியாய் தகித்த வெப்பு நோய் நீங்கியது. எனவே நீ பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து வரவேண்டும்’ என்றார். அதன்பேரில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.
கனவில் தெரிந்த காட்சி :
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தை அவர்கள் அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டதால், அங்கேயே தங்கினார்கள். கூன்பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவனது கனவில் தோன்றிய ஈசன், ‘இங்கே எனக்கொரு கோவில் கட்டு’ என்றார். அதன்படியே அங்கேயே மன்னன் ஒரு கோவிலை கட்டினான். அதற்கு அண்ணாமலையார் கோவில் என்ற திருநாமத்தை சூட்டினான் என்கிறது தல புராணம்.
மூலவர் அருணாசலேஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்கு அர்த்த மண்டபம், முக்தி மண்டபம் மற்றும் ஞானசண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், சனீஸ்வரர், கணபதி, முருகன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
126 அடி உயர ராஜகோபுரம் :
பழமை வாய்ந்த இத் திருக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கோவிலை புனரமைக்கும் பணியை சித்தர் ராஜா மகேந்திர சுவாமிகள் மேற்கொண்டார். ரூ.2 கோடி செலவில் 7 அடுக்குகள் கொண்ட வகையில் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. மேலும் மகா மண்டபம், அம்மன்கோவில் கோபுரம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் இருப்பதை போன்று, கோவிலில் அஷ்டலிங்கங்களுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகள் விரைவில் முடிவு பெற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடாகி வருகிறது.
இந்தக் கோவிலில் பிரசித்திப்பெற்ற சொர்ணபைரவர் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று இவரை வழிபட்டால் பொன், பொருள் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து தைப்பூசம், கார்த்திகை மாத சோமவாரம் ஆகிய தினங்களில் நாள் முழுவதும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்து மண்சோறு சாப்பிடுகின்றனர்.
பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் 2 கால பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமாதம் மகாசிவராத்திரி, சித்ராபவுர்ணமி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூரில் இருந்து ஆம்பலாப்பட்டு 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து பஸ்வசதி உள்ளது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழியில் பாப்பாநாடு என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து 2½ கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.
தலபுராணம் :
மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூன் பாண்டியன், சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்கு தீங்குகள் செய்து வந்தான். இதைக் கண்டு மனம் வருந்திய அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவ நெறி தழைத்தோங்க விரும்பி, திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள். இதை அறிந்த மன்னன், திருஞானசம்பந்தரை மதுரையில் இருந்து வெளியேற உத்தரவிட்டான். அன்று இரவு திருஞானசம்பந்தரும், சிவனடியார்களும் தங்கியிருந்த மடத்துக்கு சிலர் தீவைத்தனர். திருஞானசம்பந்தரோ ‘இந்த தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ என்று பாடினார்.
சம்பந்தர் வாக்கு உடனே பலித்தது. அந்த தீ மன்னனிடம் சென்று, அவனுக்கு வெப்பு நோயை உண்டாக்கியது. அந்த நோயை போக்கிட பலரும் கடும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. நோயின் கொடுமை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மங்கையர்க்கரசி மன்னனிடம் சென்று, ‘திருஞானசம்பந்தருக்கு தீங்கு இழைத்த தால்தான் இந்த நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு வரவழைத்தால்தான் நோய் குணமாகும்’ என்றாள்.
அதற்கு மன்னன் இசைவு தர, மங்கையர்க்கரசியின் வேண்டு கோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்குச் சென்றார். ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்று திருப்பதிகத்தை பாடி மன்னனின் உடல் மீது தம் திருக்கரத்தால் திருநீற்றைப் பூசினார். அவரது வெப்பு நோய் உடனடியாக தீர்ந்தது. மன்னன் திருஞானசம்பந்தரை வணங்கினான். திருஞானசம்பந்தர் மன்னனிடம், ‘அரசே! இறைவன் அருளால் உன் உடலை அக்கினியாய் தகித்த வெப்பு நோய் நீங்கியது. எனவே நீ பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து வரவேண்டும்’ என்றார். அதன்பேரில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.
கனவில் தெரிந்த காட்சி :
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தை அவர்கள் அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டதால், அங்கேயே தங்கினார்கள். கூன்பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவனது கனவில் தோன்றிய ஈசன், ‘இங்கே எனக்கொரு கோவில் கட்டு’ என்றார். அதன்படியே அங்கேயே மன்னன் ஒரு கோவிலை கட்டினான். அதற்கு அண்ணாமலையார் கோவில் என்ற திருநாமத்தை சூட்டினான் என்கிறது தல புராணம்.
மூலவர் அருணாசலேஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்கு அர்த்த மண்டபம், முக்தி மண்டபம் மற்றும் ஞானசண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், சனீஸ்வரர், கணபதி, முருகன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
126 அடி உயர ராஜகோபுரம் :
பழமை வாய்ந்த இத் திருக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கோவிலை புனரமைக்கும் பணியை சித்தர் ராஜா மகேந்திர சுவாமிகள் மேற்கொண்டார். ரூ.2 கோடி செலவில் 7 அடுக்குகள் கொண்ட வகையில் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. மேலும் மகா மண்டபம், அம்மன்கோவில் கோபுரம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் இருப்பதை போன்று, கோவிலில் அஷ்டலிங்கங்களுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகள் விரைவில் முடிவு பெற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடாகி வருகிறது.
இந்தக் கோவிலில் பிரசித்திப்பெற்ற சொர்ணபைரவர் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று இவரை வழிபட்டால் பொன், பொருள் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து தைப்பூசம், கார்த்திகை மாத சோமவாரம் ஆகிய தினங்களில் நாள் முழுவதும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்து மண்சோறு சாப்பிடுகின்றனர்.
பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் 2 கால பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமாதம் மகாசிவராத்திரி, சித்ராபவுர்ணமி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூரில் இருந்து ஆம்பலாப்பட்டு 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து பஸ்வசதி உள்ளது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழியில் பாப்பாநாடு என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து 2½ கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.
கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. இதை திருமங்கையாழ்வார் பாடிய, ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோவில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என்ற பாடல் மூலம் அறியலாம். கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.
நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.
தல வரலாறு :
சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.
பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது.
கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.
ஆண்டுதோறும் மார்கழி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நான்காம் நாள் பெருமாள், கருடன் மேல் வீதி உலா வருவார். இந்த விழாவின் போது ஒரு அதிசயம் நடக்கிறது. அதாவது கல்கருட உற்சவரை சன்னிதியில் இருந்து தூக்கும்போது நான்கு பேர்தான் தூக்குவார்கள். வீதி உலா நடைபெறும் போது, 4 என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்று தூக்குவோரின் எண்ணிக்கை உயரும். வீதி உலா முடிந்து கோவிலுக்குள் வந்து, உற்சவரை சன்னிதியில் வைக்கும் போது தொடக்கத்தில் இருந்த நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்கள்.
இந்த வைபவத்திற்கு தலவரலாறு ரீதியாக ஒரு விளக்கமும் அளிக்கிறார்கள். அதாவது, பெருமாள் மேதாவி மகரிஷிக்கு ஒரு வரம் அளித்தார். அனைத்திலும் தாயார் நாச்சியாரே முதலிடம் பெறுவார் என்பதே அந்த வரம். தாயார் இந்த சன்னிதியில் அன்ன வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.
இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார்.
இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது. அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந் திருக்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.
கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. இதை திருமங்கையாழ்வார் பாடிய, ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோவில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என்ற பாடல் மூலம் அறியலாம். கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.
நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.
தல வரலாறு :
சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.
பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது.
கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.
ஆண்டுதோறும் மார்கழி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நான்காம் நாள் பெருமாள், கருடன் மேல் வீதி உலா வருவார். இந்த விழாவின் போது ஒரு அதிசயம் நடக்கிறது. அதாவது கல்கருட உற்சவரை சன்னிதியில் இருந்து தூக்கும்போது நான்கு பேர்தான் தூக்குவார்கள். வீதி உலா நடைபெறும் போது, 4 என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்று தூக்குவோரின் எண்ணிக்கை உயரும். வீதி உலா முடிந்து கோவிலுக்குள் வந்து, உற்சவரை சன்னிதியில் வைக்கும் போது தொடக்கத்தில் இருந்த நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்கள்.
இந்த வைபவத்திற்கு தலவரலாறு ரீதியாக ஒரு விளக்கமும் அளிக்கிறார்கள். அதாவது, பெருமாள் மேதாவி மகரிஷிக்கு ஒரு வரம் அளித்தார். அனைத்திலும் தாயார் நாச்சியாரே முதலிடம் பெறுவார் என்பதே அந்த வரம். தாயார் இந்த சன்னிதியில் அன்ன வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.
இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார்.
இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது. அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந் திருக்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.






