மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் குறித்து ஆராய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது. இன்று டெல்லி திரும்பியபின் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு நிரந்தர அமைதி உருவாவதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவேண்டும் என்றார்.