என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கல்பாக்கம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தத்தில் நிழல்குடை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக விடுபட்டு வரும் நிலையில் தற்போது புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

    தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர்களின் நலன் காப்பதற்காக 'வாட்ஸ்அப்' குழுக்களை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 8 உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்களையும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பியது. தமிழக அரசு அனுப்பி வைத்த இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார். இப்போது சைலேந்திர பாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

    புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விட மீனவர்கள் மற்றும் சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், ஜப்பான் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் ஜப்பானுக்கு பச்சைக்கொடி காட்டியது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் கடலில் விட இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். இன்று முதல் 24-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

    மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா முஜும்தார், I.N.D.I.A. கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள், ஆனால், இந்தியா உங்களுடன் இல்லை என மம்மா பானர்ஜி குறித்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுகந்தா மஜும்தார் கூறுகையில் ''நீங்கள் (மம்தா பானர்ஜி) I.N.D.I.A. கூட்டணியில் உள்ளீர்கள். ஆனால், இந்தியா உங்களோடு இல்லை. இந்தியா மோடியுடன் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். அதை மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த இயலாது. உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நேரம் வரும்போது அவர்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள்'' என்றார்.

    பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சன்னி தியோல் வாங்கிய கடனுக்காக, அவருடைய பங்களாவை ஏலம் விட பரோடா வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அறிவிப்பு வெளியிட்ட, 24 மணி நேரத்திற்குள்ளேயே, தொழில்நுட்ப காரணங்களை மேற்கொள்காட்டி அறிவிப்பை திரும்ப பெற்றது.

    இதற்கு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.

    இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.

    நிலவில் நாளைமறுதினம் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருக்கிறது. நிலவின் அருகில் சென்றுள்ள லேண்டர், நிலவின் படங்களை எடுத்து அனுப்பியது. படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், அதை கிண்டல் செய்யும் வகையில் டீ ஆத்துவது போன்ற படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக இதுவரை 1.55 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மீது பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன. பரிசீலனைக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

    கடந்த 2003-2004-ம் ஆண்டு தொலை நோக்கு திட்டமான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.4,276 கோடி செலவில் தினமும் 400 மில்லியன் லிட்டர் (40 கோடி லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது.

    ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமான இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    சந்திரயான் 3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அங்குள்ள சூழல், இடர்பாடுகளை கண்டறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை லேண்டர் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

    ×