வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன், உள்ளிட்ட அமைச்சர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி-நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.