என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

    ரோஹித்தின் தாயார் மீன் விற்று கொண்டிருந்தார். தூரத்திலேயே தாயை கண்டு மகிழ்ந்தாலும், வேண்டுமென்றே முகத்திலிருந்த மாஸ்கை விலக்காமால் ரோஹித், தாயிடம் சென்று "மீன் என்ன விலை?" என கேட்டு வியாபாரம் செய்தார்.

    காவல்துறையினர் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடனும் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான். வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது.

    டெல்லியில் ஜோத்பூர் அலுவலர்கள் விடுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் உயர்மட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது, குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.டேனிஷ் அலியை தகாத வார்த்தைகளால் பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதூரி விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். இன்று வெளியான 2-வது ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பா.ஜ.க. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது. 2024 தேர்தலில் பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும் என்று கூறினார்.

    பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுதிய கடிதத்தில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றார்.

    ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்தது. இதனால் சீனாவிற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும், இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தனிஷ் அலியுடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருக்கும் ராகுல் காந்தி, எதிர்ப்புகள் நிறைந்த சந்தையில், அன்புக்கும் இடமுண்டு என்று தெரிவித்து உள்ளார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்று இருக்கிறார். கனடா சென்று இருக்கும் அவர், அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றி, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

    தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ×