என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி முறிவை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

    "அகதிகள் குடியேறும் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல் தங்கள் கலாச்சாரத்தையே பின்பற்றி தனியாக வாழ்கிறார்கள். ஒரு சில சமயம், நாட்டின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்" என்றார் சுவெல்லா. 

    இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். காலை 11.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எம்.எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இஸாருக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் சிலர் அவரை திருடன் என நினைத்து ஒரு மரத்தில் கட்டி வைத்து கம்புகளால் தாக்கியுள்ளனர்.

    அண்ணாமலையை மாற்ற கோருவது எங்கள் நோக்கமல்ல. இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது. தேசிய கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுகிறது. 2024 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

    டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர். இந்நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

    வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும். இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் `BADASS'பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.

    பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள் என மேனகா குற்றம்சாட்டினார். விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் கூட மீட்டு வளர்த்து வருகிறோம் என இஸ்கான் பதிலளித்துள்ளது.

    மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கை இந்தியாவில் தொடர்வதை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் 6 மாநிலங்களில் 50 இடங் களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், அரியானாவில் 4 இடங்கள், உத்தரகாண்டில் 2 இடங்கள், டெல்லி-என்சிஆர் மற்றும் உ.பி.யில் தலா 1 இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.

    சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.

    இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ×