இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களை கண்டுகளித்த பிரதமர் மோடி, அங்கிருந்த டிரம்சை வாசித்து மகிழ்ந்தார். மேலும், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.