அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெறுகிறது. அமர்நாத் யாத்திரை செல்லும்போது தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவுப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 5 கிலோமீட்டர் நடைபயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.