என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் கிரிவலம்
    X
    சென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் கிரிவலம்

    அக்னி நட்சத்திர விழா: சென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் கிரிவலம்

    இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழிக்கவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக் குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் புறப்பட்டனர்.

    இன்று காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலைக் கோவிலில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்துள்ளனர்.
    Next Story
    ×