என் மலர்tooltip icon

    வழிபாடு

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ருத்ரகோட்டி விமானத்தில் சாமி வீதி உலா
    X
    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ருத்ரகோட்டி விமானத்தில் சாமி வீதி உலா

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ருத்ரகோட்டி விமானத்தில் சாமி வீதி உலா

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.
    காஞ்சீபுரம் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 8-ந்தேதி பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் கொடியேற் றத்துடன் தொடங்கியது.

    கடந்த 11 தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாக னங்களில் ஏகாம்பர நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று அதிகாலை பங்குனி திருக்கல்யாண திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது நேற்று நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.

    காஞ்சீபுரம் அனைத்து பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திரு விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏகாம் பரநாதர் மற்றும் வள்ளி தேவயானை முருகன் உள் ளிட்டவர்களை வணங்கி னார்கள். மேலும் நள்ளிரவு 3 மணி வரை வாண வேடிக்கை நடைபெற்றது.
    Next Story
    ×