என் மலர்
வழிபாடு

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது.
இந்த கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11- வது நாளான இன்று அதிகாலை ஏலவார்குழலி- ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று இரவே ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் பரதநாட்டியம், சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும்கு ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி வீதியுலா நடந்தது.
வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறுகிறது.
இந்த கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11- வது நாளான இன்று அதிகாலை ஏலவார்குழலி- ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று இரவே ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரவு முழுவதும் கோவில் வளாகத்தில் பரதநாட்டியம், சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும்கு ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி வீதியுலா நடந்தது.
வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறுகிறது.
Next Story






