என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் அனுமதி

    ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து 5.60 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக முயற்சி செய்தனர்.
    திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 2.40 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து 5.60 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக முயற்சி செய்தனர். இதனால் இன்டர்நெட் சேவை முடங்கியது.

    இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் இன்டர்நெட் சேவையில் ஏற்பட்ட பழுதை நீக்கினர். இதையடுத்து ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2.40 லட்சம் தரிசனம் டிக்கெட்டுகள் 2 மணி நேரத்தில் பக்தர்கள் பதிவு செய்தனர்.

    நேற்று மட்டும் ஒரே நாளில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற ஒரு கோடி பக்தர்கள் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×