என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியானது பக்தர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியானது பக்தர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

    அமாவாசை நாளில் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், தர்ப்பண பூஜை செய்யவும் தடை உள்ளதால் சித்திரை மாத அமாவாசைக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் புனித நீராட வரவில்லை. இதே போல் திதி, தர்ப்பண பூஜையும நடைபெறவில்லை.
    ராமேசுவரம் :

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 26-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை அமலில் இருந்து வருகிறது.

    இதே போல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், தர்ப்பண பூஜை செய்யவும் தடை உள்ளதால் சித்திரை மாதத்தின் அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் புனித நீராட வரவில்லை. இதே போல் திதி, தர்ப்பண பூஜையும நடைபெறவில்லை.

    இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதசுவாமி கோவில் ரத வீதி சாலைகள், சன்னதி தெரு உள்ளிட்ட இடங்களும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ் வழக்கமாக இது போன்ற அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கு பக்தர்கள் வந்து குவிந்து, கடலில் புனித நீராடி தர்ப்பண பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×