என் மலர்
செய்திகள்

பவானி கூடுதுறையில் புனித நீராடிய பக்தர்கள்.
ஆடி பெருக்கு- பவானி கூடுதுறையில் குவிந்த புதுமண தம்பதிகள்
இன்று ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் குவிந்தனர். பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
தமிழக மக்கள் கொண் டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு மழை பெய்து ஆறுகளில் கரைபுரண்டோடி வரும் வெள்ளப்பெருக்கை கண்டு மகிழும் மக்கள் அதில் நீராடி மகிழ்வர்.
இந்த நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் திரண்டு வந்து புது தாலி கயிறு மாற்றி நீர் நிலைகளில் வழிபட்டு செல்வார்கள்.
ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அழுதா நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஆண்டு தோறும் பக்தர்கள், புதுமண தம்பதிகள், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் திரண்டு காவரி ஆற்றில் நீராடி மகிழ்வார்கள்.
அதே போல் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் குவிந்தனர்.
பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி மண மாலையை காவிரி ஆற்றில் விட்டு விட்டு தங்கள் வாழ்வு சிறக்க காவிரி தாயை வழிபட் டனர்.
சுமங்கலி பெண்கள் புது தாலி கயிற்றில் மஞ்சள் தடவி தங்கள் கணவன் கையால் கழுத்தில் அணிந்து கொண்டனர்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாத கன்னி பெண்களும் தங்கள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு வரன் அமைய காவிரி தாயை வழிபட்டு நீராடி சங்கமேஸ்வரர்- வேத வல்லி நாயகி அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்.

கடந்த அண்டு இதே நாளில் தென் மேற்கு பருவ மழை கொட்டி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு கரை புரண்டு ஓடியது.
ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய் யாததால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. இதனால் ஆற்றில் சிறிதளவே தண்ணீர் சென்று கொண்டிருந்தது. எனினும் ஆற்றின் மத்தியில் ஆழம் அதிகம் உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் சென்று விட வேண்டாம் என போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஒலி பெருக்கி மூலம் கேட்டு கொண்டே இருந்தனர்.
ஆடிப் பெருக்கு விழா வில் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடு துறையில் நீராடி வழிபட்டு சென்றனர்.
இதே போல் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த னர்.
புதுமண தம்பதிகள் குவிந்து தங்கள் வாழ்வு சிறக்க வழிபட்டனர். புது தாலி கயிற்றை மாற்றி கொண்டனர். மண மக்கள் தங்கள் மண மாலையை பத்திரமாக கொண்டு வந்து ஆற்றில் விட்டு வணங்கினர்.
இந்த நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் திரண்டு வந்து புது தாலி கயிறு மாற்றி நீர் நிலைகளில் வழிபட்டு செல்வார்கள்.
ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அழுதா நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஆண்டு தோறும் பக்தர்கள், புதுமண தம்பதிகள், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் திரண்டு காவரி ஆற்றில் நீராடி மகிழ்வார்கள்.
அதே போல் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் குவிந்தனர்.
பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி மண மாலையை காவிரி ஆற்றில் விட்டு விட்டு தங்கள் வாழ்வு சிறக்க காவிரி தாயை வழிபட் டனர்.
சுமங்கலி பெண்கள் புது தாலி கயிற்றில் மஞ்சள் தடவி தங்கள் கணவன் கையால் கழுத்தில் அணிந்து கொண்டனர்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாத கன்னி பெண்களும் தங்கள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு வரன் அமைய காவிரி தாயை வழிபட்டு நீராடி சங்கமேஸ்வரர்- வேத வல்லி நாயகி அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்.

கடந்த அண்டு இதே நாளில் தென் மேற்கு பருவ மழை கொட்டி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு கரை புரண்டு ஓடியது.
ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய் யாததால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. இதனால் ஆற்றில் சிறிதளவே தண்ணீர் சென்று கொண்டிருந்தது. எனினும் ஆற்றின் மத்தியில் ஆழம் அதிகம் உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் சென்று விட வேண்டாம் என போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஒலி பெருக்கி மூலம் கேட்டு கொண்டே இருந்தனர்.
ஆடிப் பெருக்கு விழா வில் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடு துறையில் நீராடி வழிபட்டு சென்றனர்.
இதே போல் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த னர்.
புதுமண தம்பதிகள் குவிந்து தங்கள் வாழ்வு சிறக்க வழிபட்டனர். புது தாலி கயிற்றை மாற்றி கொண்டனர். மண மக்கள் தங்கள் மண மாலையை பத்திரமாக கொண்டு வந்து ஆற்றில் விட்டு வணங்கினர்.
Next Story






