என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த இலக்கை நிர்ணயித்து எங்களால் வெற்றி பெற முடியும் என்பதை காட்டியுள்ளோம்: குல்தீப் யாதவ்
Byமாலை மலர்28 Jun 2019 2:31 PM GMT (Updated: 28 Jun 2019 2:31 PM GMT)
எதிரணிக்கு குறைந்த இலக்கை நிர்ணயித்து எங்களால் வெற்றி பெற முடியும் என்பதை காட்டியுள்ளோம் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு 224 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு 268 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயித்து அதற்குள் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை நாங்கள் காட்டிவிட்டோம் என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து கடந்து இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்து வீசி வருகிறார். அப்புறம் முகமது ஷமி இரண்டு போட்டியில்தான் விளையாடியுள்ளார். இரண்டிலும் அசத்தியுள்ளார். நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். அதேபோல் சிறந்த சுழற்பந்து வீச்சையும் கொண்டுள்ளோம்.
நாங்கள் அணியின் காம்பினேசனை பார்க்கிறோம். பந்து வீச்சு தாகுதலில் சிறப்பாக செயல்படுவது முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 225 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். இதுபோன்ற குறைந்த ரன்னுக்குள் எதிரணியை எங்களால் கட்டுப்படுத்த முடியும்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கும் குறைவாகத்தான் எடுப்போம் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்டியா, டோனி ஆட்டத்தில் சிறந்த ஸ்கோர் கிடைத்தது’’ என்றார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து கடந்து இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்து வீசி வருகிறார். அப்புறம் முகமது ஷமி இரண்டு போட்டியில்தான் விளையாடியுள்ளார். இரண்டிலும் அசத்தியுள்ளார். நாங்கள் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். அதேபோல் சிறந்த சுழற்பந்து வீச்சையும் கொண்டுள்ளோம்.
நாங்கள் அணியின் காம்பினேசனை பார்க்கிறோம். பந்து வீச்சு தாகுதலில் சிறப்பாக செயல்படுவது முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 225 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். இதுபோன்ற குறைந்த ரன்னுக்குள் எதிரணியை எங்களால் கட்டுப்படுத்த முடியும்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கும் குறைவாகத்தான் எடுப்போம் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்டியா, டோனி ஆட்டத்தில் சிறந்த ஸ்கோர் கிடைத்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X