என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹரிஸ் சோஹைல் பட்லரை போன்று அதிரடியாக விளையாடினார்- சர்பராஸ் அகமது புகழாரம்
Byமாலை மலர்24 Jun 2019 11:45 AM GMT (Updated: 24 Jun 2019 11:45 AM GMT)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹரிஸ் சோஹைலின் ஆட்டம் பட்லரை போன்று இருந்தது என சர்பராஸ் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 30 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹரிஸ் சோஹைல் களம் இறங்கினார். அவர் 59 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஹரிஸ் சோஹைல் ஆட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். இதகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி ஒரு அணியாக கூட்டு முயற்சிக்கு கிடைத்தது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அதன்பின் ஹரிஸ் சோஹைல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் ஜோஸ் பட்லர் ஆட்டத்தை போன்று இருந்தது.
தொடரின் தொடக்கத்தில் அணி காம்பினேசன் காரணமாக ஹரிஸ் சோஹைலுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கி அசத்தினார். அணியில் சோஹைல் முற்றிலும் மாறுபட்ட வீரர்’’ என்றார்.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 30 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹரிஸ் சோஹைல் களம் இறங்கினார். அவர் 59 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஹரிஸ் சோஹைல் ஆட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். இதகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி ஒரு அணியாக கூட்டு முயற்சிக்கு கிடைத்தது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அதன்பின் ஹரிஸ் சோஹைல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் ஜோஸ் பட்லர் ஆட்டத்தை போன்று இருந்தது.
தொடரின் தொடக்கத்தில் அணி காம்பினேசன் காரணமாக ஹரிஸ் சோஹைலுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கி அசத்தினார். அணியில் சோஹைல் முற்றிலும் மாறுபட்ட வீரர்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X