என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்15 Jun 2019 1:25 PM GMT (Updated: 15 Jun 2019 5:17 PM GMT)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உதானா, டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருரத்னே, குசல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். இலங்கை அணியில் அதிகப்பட்சமாக கருரத்னே 97 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2, ஜாசன் பேண்ட்கிராப்ட் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உதானா, டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருரத்னே, குசல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். இலங்கை அணியில் அதிகப்பட்சமாக கருரத்னே 97 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2, ஜாசன் பேண்ட்கிராப்ட் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X