search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்
    X

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆன ஆட்டத்தில் இவர்தான் வெற்றி பெறுவார் என சோயப் அக்தர் சுவாரசியமான கருத்தினை கூறியுள்ளார்.
    2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நாளை (ஜூன் 16) நடைபெற உள்ள 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பதால் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் டுவிட்டரில் சுவாரசியமான செய்தியினை பதிவேற்றியுள்ளார்.

    அக்தர் டுவிட்டரில் பதிவேற்றிய செய்தியாவது:-

    இங்கிலாந்தில் தற்போது நிலவி வரும் வானிலை நிலவரம் காரணமாக வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் போட்டியில் மழை தான் நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அக்தர் ட்டுவிட் செய்துள்ளார். 

    நகைச்சுவையாக ட்டுவிட் செய்துள்ள அக்தரின் பதிவினை பல கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிந்து வருகின்றனர். உலக்கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வரும் இங்கிலாந்து நாட்டில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் போது மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×