search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னரின் மந்தமான ஆட்டத்திற்கு இதுதான் காரணம்: ஆரோன் பிஞ்ச்
    X

    வார்னரின் மந்தமான ஆட்டத்திற்கு இதுதான் காரணம்: ஆரோன் பிஞ்ச்

    ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்த டேவிட் வார்னர், உலகக்கோப்பையில் மந்தமாக விளையாடுவதற்கு இதுதான் காரணம் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அவர் 12 இன்னிங்சில் ஒரு சதம், 8 பவுண்டரிகளுடன் 692 ரன்கள் குவித்தார். சராசரி 69.20. ஸ்டிரைக் ரேட் 143.86 ஆகும்.

    ஆனால் உலகக்கோப்பையில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி வரும் டேவிட் வார்னரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 114 பந்தில் 89 ரன்கள் சேர்த்தார். பவர் பிளே ஆன முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலியா 55 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 32 பந்தில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 50-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தியாவுக்கு எதிராக பவர்பிளேயில 34 பந்தில் 18 ரன்களே சேர்த்தார்.

    வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது திணறுகிறார் என்ற விமர்சனம் எழும்பியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பது குறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடருக்கும், உலகக்கோப்பை தொடருக்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது. இந்திய ஆடுகளங்களில் காத்திருந்து பந்தை விரட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இங்கிலாந்தில் உள்ள ஆடுகளத்தில் எல்லா ஓவர்களிலும் ‘க்ரீஸ்’க்கு வெளியில் வந்து பந்தை எளிதாக அடித்து விரட்ட முடியாது.

    உலகக்கோப்பையில் அனைத்து அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கிளப் போட்டிகள் போன்று ஒரு பந்து வீச்சாளரை குறிவைத்து அதிரடியாக விளையாட முடியாது. ஒரு பந்து வீச்சாளரை தேர்வு செய்வது மிகவும் கடினம். ஒவ்வொரு அணியும் வலுவாக உள்ளது. இதனால் ஆட்டம் செல்வதை கணித்து அதற்கு ஏற்ப ஆட்டத்தை கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல. தற்போது வரை டேவிட் வார்னரின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. இன்னும் அதிரடி ஆட்டத்தை மட்டும்தான் அவரால் வெளிப்படுத்தவில்லை.

    அவர் மெதுவாக விளையாடுவது அணியின் திட்டத்தில் ஒரு அம்சம் இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இதனால்தான் அவர் அடித்த பெரும்பாலான பந்துகள் பீல்டர் வசம் சென்றது. இதனால் டேவிட் வார்னர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் தனது மனநிலையை சற்று மாற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.
    Next Story
    ×