search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டாரா?
    X

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டாரா?

    • லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.
    • நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தில் பச்சை நிற ராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் முகத்தில் கடுமையாக எதையோ யோசிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.

    இதனை தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் அழைப்பு இல்லாமல் கூட உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது இதுபோன்று நடக்கும் என கிண்டல் செய்துள்ளார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சந்தர்ப்ப சூழல் காரணமாகவே அந்த தருணத்தில் ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×