search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவல் நீட்டிப்பு
    X

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவல் நீட்டிப்பு

    • அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
    • விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையே தோஷகானா வழக்கில் கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 5-ந் தேதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதேசமயம் இந்த அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 10-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி முகமது குரேஷிக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

    Next Story
    ×