search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போட்டியிட தடை: டொனால்டு டிரம்பின் மேல்முறையீடு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்
    X

    போட்டியிட தடை: டொனால்டு டிரம்பின் மேல்முறையீடு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்

    • குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளார்.
    • ஒருவேளை தடைவிதிக்கப்பட்டால், அமெரிக்கா வரலாற்றில் இது முதல் முறையாகும்.

    2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

    கொலராடோவின் உச்சநீதிமன்றம், ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் போட்டியிட டிரம்புக்கு தடைவிதித்தது. ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க பாராளுமன்றம் மீதான தாக்குதலின் காரணமாக கொலராடோ உச்ச நீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்தது.

    இதனை எதிர்த்து டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் மூன்று நீதிபதிகளை நியமித்துள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாய்மொழி வாதங்களை கேட்பதாக தெரிவித்துள்ளது.

    அதேபோல் 77 வயதான டிரம்பின் பெயர், மாநிலத்தின் முதன்மை வாக்குச்சீட்டில் தோன்றுவதைத் தடுக்கும் மைனின் உயர் தேர்தல் ஆணையர் எடுத்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

    குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கும் டிரம்பின் வழக்கறிஞர்கள், ஜனநாயகக் கட்சியின் மைனே வெளியுறவுச் செயலர் ஷென்னா பெல்லோஸ் அளித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு மைனே உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர் "ஒருதலைப்பட்சமான முடிவெடுப்பவர்" என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×